(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“டேய் என்னடா சொல்ற”

   

“ஆமாம்மா அண்ணாவால எப்படி 4 பொண்ணுங்களை பார்த்துக்க முடியும் இப்பவே ரெண்டு பொண்ணை எங்க பக்கம் தள்ளிவிடேன்”

   

“அது முடியாது உன் தாத்தா திட்டுவாரு. பொறுமையா இரு 1 மாசம் முடிஞ்ச பின்னாடி எந்த பொண்ணு ரிஷிக்கோ அவளை விட்டுட்டு மிச்சம் இருக்கற பொண்ணுல ஒண்ணை நீ கட்டிக்க”

   

“ஆனா போட்டி ரொம்ப கஷ்டமாயிருக்கும் போல இருக்கும்மா”

   

“எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனா நந்தினி பாவம் அவளுக்கு அர்ஜூன்தான் இருக்கான் என் அத்தை விட்டு வைப்பாங்களான்னு தெரியலை”

   

“எனக்கும் அதான் யோசனையா இருக்கு”

   

“விடுடா பார்த்துக்கலாம் வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்னு சொல்வாங்களே பார்க்கலாம்” என சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கலானார்.

   

பாட்டியோ மிருதுளாவிடம்

   

”இப்படி புதுசா ஒரு பொண்ணு வந்து நிப்பாள்ன்னு எனக்கு யாருமே சொல்லலை”

   

“வந்தா என்ன பாட்டி உங்களுக்குதான் இந்த வீட்ல நிறைய செல்வாக்கு அதிகாரம் இருக்கே எத்தனை பேர் வந்தாலும் உங்களை வைச்சே நான் தோற்கடிச்சிடுவேன் நீங்க என் கூட இருக்கறவரைக்கும் எனக்கு பயமில்லை”

   

என தைரியமாக சொன்னவளை விநோதமாக பார்த்தார் பாட்டி அருந்ததி.

   

வந்தனா நந்தினியை கண்டதும் பவித்ராவிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.