“எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற”
“ஆமாம் மத்த பொண்ணுங்களுக்கு பின்புலம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு இந்த பொண்ணுக்கு அர்ஜூன் மட்டும்தான் இருக்கான். அவனை ஓரம்கட்ட முடியாதா என்ன”
“அடப்பாவி நீயாடா இப்படி பேசறது பொண்ணுங்களை விட வேலைதான் முக்கியம்ன்னு சொல்வ”
“ஆமாம் ஆனா இப்பதானே நான் இவளைப்பார்த்தேன்”
“இதப்பாரு இப்ப நீ எதையும் செஞ்சி குழப்பிடாத 1 மாசம் ஆகட்டும் அப்புறம் உன் வேலையை ஆரம்பி”
“சரி சரி” என தலையாட்டிக்கொண்டே நந்தினியையே பார்த்த விழி பார்த்தபடி இருந்தான் தினகரன். அதைப்பார்த்த கருணா அங்கிருந்து நகர்ந்து தன் தாயிடம் மெதுவாக பேசினான்
”அம்மா” என்றான் கருணா
“சொல்டா”
“இந்த புதுப்பொண்ணு ரொம்ப அழகாயிருக்காள்ல”
”ஆமாம் எனக்கு புடிச்சிருக்கு”
“அப்ப மீதி 3 பொண்ணுங்களை பிடிக்கலையா”
“அதுல வந்தனா நல்லாயிருக்கா அவளோட பார்க்கறப்ப இந்த நந்தினி சூப்பர்டா”
“பேசாம எனக்கு இவளை முடிவு பண்ணிடேன்” என்றான் கருணா