கூட்டிட்டு போயிருக்கா 8 மணிக்குள்ள வந்துடுவோம்னு போனாங்கப்பா வந்துடுவாங்க”
“பொறுமையாவே வரட்டும் வராமலே போனா இன்னும் நிம்மதி எனக்கு” என அவன் சொல்லும் போதே காபியுடன் வந்த வந்தனா அதை தாத்தாவிற்கும் ரிஷிக்கும் காபி கப்களை நீட்டவும் ரிஷியோ வந்தனாவிடம்
”சாரிம்மா நான் இன்னும் குளிக்கலை நான் போய் குளிச்சிட்டு வரேன்” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல அந்த காபியை அப்படியே அங்கிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு மற்றவர்களுக்கு அவர்களின் அறைகளுக்கே சென்று காபியை தந்துவிட்டு காலை டிபனுக்காக அவசரமாக கிச்சனுக்குள் சென்றாள். பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த நந்தினியும் தாத்தாவிடம் வந்தாள்.
”என்னம்மா இன்னிக்கு நீ சாமி கும்பிட போயிட்ட”
“தாத்தா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதான் அப்புறம் தாத்தா சாயங்காலம் கோயில்ல விளக்கு வைக்க போகட்டுமா தாத்தா”
”அது என்னம்மா வேண்டுதலா கட்டாயமா கோயிலுக்கு போகனுமா”
“அப்படியில்லை தாத்தா”
“அப்புறம் என்ன நீ வீட்லயே சாமி கும்பிட்டு விளக்கு வை போதும் எங்க வைச்சாலும் கடவுளுக்குதான் போய் சேரும்” என சொல்லவும் அவளும் சரியென தலையாட்டினாள். அங்கிருந்த காபியை கண்டவள்
”தாத்தா இது என்ன காபி குடிக்கலையா”
“இது ரிஷியோடது அவன் குளிக்க போயிருக்கான்”
“ஆனா அத்தான் வர்றதுக்குள்ள இது ஆறிடுமே”