வைத்துவிட்டார்.
அறையை விட்டு காபி டம்ளருடன் வெளியே வந்த ரிஷிக்கு அர்ஜூன் இடமிருந்து போன் வரவும்
”ஹலோ சொல்றா மச்சான்” என்றான் ரிஷி
”நீங்க பண்றது தப்பு சரியில்லை வேணாம் சொல்லிட்டேன் இப்படியே பண்ணீங்கன்னா நான் நந்தினியை கூட்டிட்டு போயிடுவேன் ஒழுங்காயிருங்க அதான் நல்லது”
என அர்ஜூன் கத்திவிட்டு போனை வைத்துவிட ரிஷிக்கு உடலெல்லாம் நெருப்பு பற்றிக்கொண்டது போல சூடானான்.
நம்மளை பத்தி யார் போட்டுத்தர்றது நந்தினி ரூமுக்கு வந்தப்ப யார் இருந்தா ஆங் தாத்தா தானே ஹால்ல இருந்தாரு. இது அவரோட வேலையா எங்க அவரு” என நினைத்துக்கொண்டே நேராக ஹாலுக்கு வந்தவன் கோபமாக தாத்தாவை பார்த்து முறைத்தப்படி அவர் பக்கத்தில் அமர்ந்தான்.
”என்னடா என்னாச்சி”
“என்ன ஆச்சா என்னை வேவு பார்க்கறீங்களா தாத்தா”
“இல்லையே”
“அப்புறம் எப்படி அர்ஜூனுக்கு நந்தினி எனக்காக வந்தது தெரியும்”
“அர்ஜூன் நந்தினியை பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு போனான். நீ ஏதாவது செஞ்சா சொல்ல சொன்னான் அதான் சொன்னேன்”
“நீங்க எனக்குதானே தாத்தா ஆனா எனக்கு எதிராவே இப்படி நடந்துக்கலாமா”