“நீ ஏண்டா தப்பான காரியம் பண்ற”
“நான் தப்பு பண்ணேனா”
“ஆமாம் 10 நிமிஷமா நந்தினியோட உன் ரூம்ல என்னடா வேலை”
“அது சின்ன சிறுசுங்களுக்கு ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு”
“கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு”
“எப்படியும் நான் அவளைத்தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோன்”
”இந்த போட்டியில அவள் ஜெயிக்கலைன்னா அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதாயில்லை”
”அய்யோ தாத்தா அப்ப என் காதல் என்னாகிறது“
“ஓ நீ காதல் வேற செய்றியா ஆனா இதுக்கு முன்னாடி நீ அப்படி சொல்லலையே”
“அது எனக்காக நந்தினி வராளான்னு பார்த்துட்டு லவ் பண்ணலாம்னு நினைச்சேன்”
“சரியான சந்தேகப்புத்திடா உனக்கு. இதுக்கு பேரா காதல் ஒரு வேளை அவள் வரலைன்னா என்ன செஞ்சிருப்ப நான் காட்டற பொண்ணைத்தானே கட்டியிருந்திருப்ப”
“அதான் இல்லை நான் லவ் பண்ணலைன்னாலும் நந்தினியை கல்யாணம் பண்ணிக்கறதா அவளை பார்த்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இந்த அர்ஜூன் குறுக்க வராம இருந்திருந்தா அவளை நான் என்னிக்கோ ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருப்பேன்” என ரிஷி கூலாக சொல்ல அதைக்கேட்டு சிரித்தார் தாத்தா
”என்ன தாத்தா சிரிக்கிறீங்க”