(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 13 - சசிரேகா

   

போட்டியின் இரண்டாம் நாள்

   

விடிந்தது.

   

காலையில் வழக்கம் போல் உண்மையாகவே ஜாக்கிங் சென்று வந்த ரிஷிகேசன் ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான். தாத்தா அவனிடம் 

   

”பரவாயில்லையே இன்னிக்கு ஒழுங்கா ஜாக்கிங் முடிச்சிட்டு வந்திருக்க போல”

   

“பின்ன இந்த வீட்ல 4 பொண்ணுங்களும் செய்ற சாப்பாட்டை சாப்பிட்டு என் உடம்பு பெருத்திடுச்சின்னா அதான் ஜாக்கிங் செய்ய போயிட்டேன். இனி 1 மாசத்துக்கு நான் உடற்பயிற்சி செஞ்சாதான் குண்டாகாம என் உடம்பை ஃபிட்டா வைச்சிருக்க முடியும்” என சொல்ல தாத்தாவும்

   

”ஆமாம் ரிஷி நீ சொல்றதும் சரிதான். இந்த பொண்ணுங்க சமைக்கறத டேஸ்ட் பார்க்கறேன்னு என்னை விட்டு போன கொலஸ்ட்ரால் திரும்பி வந்துடுமோன்னு பயமாயிருக்கு நானும் சாப்பிட்ட பின்னாடி வீட்டுக்குள்ளேயே வாக்கிங் பண்ணப்போறேன்” என்றார் தாத்தா

   

”அப்படியே செய்ங்க ஆமா பொண்ணுங்க எழுந்துட்டாங்களா”

   

“எழுந்துட்டாங்க கீழேயும் வந்தாங்க வந்தனா காபி போட போயிருக்கா”

   

“அவளா அரை மணி ஆனாலும் காப்பி கிடைக்காதே அப்ப நந்தினி வந்தாளா இல்லையா”

   

“அவளும் வந்தா அதுக்குள்ள வந்தனா காபி போட போனாளா அதனால நந்தினி பூஜையறைக்கு சாமி கும்பிட போயிருக்கா”

   

“அப்ப மிச்சம் ரெண்டு என்னாச்சி”

   

“சோனா கிரீன் டீ போட போனா மிருதுளாவை காலையிலயே உன் பாட்டி கோயிலுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.