(Reading time: 37 - 73 minutes)

ங்கட்ட சொல்றதுக்கு என்ன தம்பி....நாங்க சாதாரண மிடில் க்ளாஸ்ல இருந்து வந்தவங்க...எங்க கல்யாணத்தப்ப இவர் ஒரு சின்ன டெயிலரிங் ஷாப்பும்...அதுல விக்றதுக்கு கொஞ்சம் துணியும் வச்சிருந்தார்....நான்தான் கடையில இவருக்கு கூடமாட உதவிக்கு...அவ்ளவுதான் வசதி...இதுல முதல் பிரசவத்துல ரெண்டு பொண்ணுங்க...அதுலயும் ஒருத்தி இப்படி....எப்படி கரை சேர்க்க போறோம்கிற கவலையே பெரிய கவலை....

இதுல நான் கடைக்கு போனாதான் கடைய சமாளிக்க முடியும்னு ஒரு நிலை...ரெண்டு பிள்ளய வச்சுகிட்டு நான் அங்க போய்தான் என்ன செய்ய முடியும்...? அதனால ஒரு பிள்ளய என் அம்மாட்ட விடுறதுன்னு ஆச்சு....

எங்களுக்கு பெரியவங்கன்னு என் அம்மா மட்டும் தான் உண்டு...பிள்ளய பிரியனுமேன்னு மனசெல்லாம் வலி....கூட இருக்கசொல்லி அம்மாவ கூப்டு பார்த்தேன்..அம்மாவுக்கு சொந்தமா கொஞ்சம் மாடு உண்டு...அதோட அப்பா வாழ்ந்த வீடுன்னு....இங்க வரமாட்டேன்னுட்டாங்க....இதுவரைக்கும் உனக்குன்னு வாழ்ந்துட்டேன்...இனிமேலாவது எனக்குன்னு இருக்கவிடுன்னு சொல்றவங்களை என்ன சொல்ல...?

ஆனா ஒரு பேத்திய கூட வச்சுகிட ஆசைபட்டாங்க...சின்னவளை அங்க விடுறதுன்னு முடிவு செய்தது நான்தான்....விருதுநகர் பக்கம் சின்ன ஊர் அது....அத்தனை பேரும் எங்க சொந்தகாரங்க...என்னதான் இருந்தாலும்...பிள்ளைய அவ குறைய சொல்லி ஒதுக்கி வைக்க மாட்டாங்க.....இங்க இருந்தா பிள்ளய கடைக்கு எடுத்துட்டு போகனும்...என் பிள்ள யார் வாய்லலாம் விழுமோன்னு....” தழுதழுத்துக்கொண்டே வந்த மாலினியின் குரல் உடைய

“விடுங்க அத்தை...இப்போ எதுக்கு பழசெல்லாம்....” ஆறுதல் படுத்தும்விதமான ஒரு அதட்டல் கவினிடமிருந்து. ஆனால் அவன் குரலிலும் வலி ஒன்றும் குறைவாய் இருப்பதாய் இவளுக்கு தோன்றவில்லை.

“இல்ல மாப்ள பேசட்டும்...உங்க கல்யாணம் வரைக்கும் ரெண்டு தூக்க மாத்ரை போட்டுகிட்டு இருந்தா தினமும்...சின்ன மாப்ள கூப்ட்டு பெரியவள ஒலிம்பிக் முடிஞ்சதும் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்னு சொன்ன அன்னைக்குதான் இவ மாத்திரை போடுறத விட்டுருக்கா... நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு சொந்த மகன் மாதிரிதான்.... உங்கட்ட பேசுறதுல ஒரு ஆறுதல்...அதோட தப்பும் பண்ணியிருக்கோமே...மன்னிப்பு கேட்டா நிம்மதி...” அப்பா சொல்ல அம்மா தொடர்கிறார்.

“ஆக சின்னவ அங்க...பெரியவ இங்க எங்களோட......மிர்னிய பார்க்கப்பல்லாம் சின்னவள ரொம்ப தேடும்...மனசு முழுக்க தினமும் வலியில தூக்கமே வராது...எப்படா ஊருக்கு போவொம்னு இருக்கும்....ஆனா அங்க போனா அடுத்த ப்ரச்சனை...

என்னமோ என் அம்மாவுக்கு இந்த மிர்னியாலதான் சின்னவ கால் இப்டி ஆகிட்டுன்னு ஒரு நினைப்பு....வயித்துக்குள்ள இருக்கிற சின்ன பிள்ள அடுத்த பிள்ளய என்ன செய்திரும்னு எப்டிலாமோ சொல்லி பார்தாச்சு....ஆனா அவங்களுக்கு எப்பவும் அப்படி ஒரு நினைப்பு....மிர்னி வேற அவ வயசு பிள்ளைங்க எல்லாரவிட வேகமா ஓடுவா ஆடுவா... அவ்ளவுதான் எங்க அம்மா அவளை கரிச்சு கொட்டுவாங்க...அவ காலையும் சேர்த்து இவ பிடுங்கிட்டு வந்துட்டானு...கேட்கிறப்ப நமக்கே கஷ்டமா இருக்கும்...சின்ன பிள்ளைங்களுக்கு எப்டி இருக்கும்..?.பெரியவ எத்தனை ஆசையா போனாலும் சின்னவ அவளை சேர்த்துக்க மாட்டா...கதவுக்கு பின்னால இருந்து பயந்து போய்தான் பார்ப்பா.......மிர்னிக்கு அங்க போனாலே காய்ச்சல் வர ஆரம்பிச்சுது...என்னவோ எங்கம்மா பேசுறதை கேட்டு அவளுக்கு காய்ச்சல் வந்துடும்...

அதோட எங்க ஊர்ல வீட்டை சுத்தி சின்ன பிள்ளைங்க உண்டு... அவங்களோட கூட சேராம விலக ஆரம்பிச்சா வேரி...மிர்னாவ பார்த்து பயந்து போய்...

ஆக நாங்க அங்க போறதும் வேரி இங்க எங்க வீட்டுக்கு வாரதும் ரொம்ப குறஞ்சு போச்சு.... இப்டி மொத்தத்துல எனக்கு பிள்ளை இருந்தும் இல்லைனு ஆகிட்டு...நான் இவளுக்காக ஏங்கியே செத்தேன்....

ஃஸ்கூல் போற வயசு வரவும் கூட கூடிட்டு வரனும்னு நினச்சுகிட்டே காலம் தள்ளுனோம்...இங்க வர்றப்ப அவள  யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு வேரி கால் விஷயம் இங்க யாருக்கும் தெரியாமலேதான் வச்சிருந்தோம்...உங்க கல்யாணம் வரைக்குமே அதை யாருக்கும் தெரியாமலே தான் பார்துகிட்டேன்...யாராவது அவள எதாவது சொல்லிட்டாங்கன்னா என் பிள்ள  மனசு எப்படி நோகும்னு கஷ்டமா இருக்கும்...... மிர்னிக்கு கூட இவ விஷயம் தெரியாது”

“ம்....வியன் சொல்லிருக்கான்...மிர்னுக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரியே இல்ல...தேவையில்லாம அவ மனசை இப்ப கலைக்கவேண்டாம்னு இப்போதைக்கு நானும் இதை சொல்லலைனு சொல்லிகிட்டு இருந்தான்....”

பார்தீங்களா...இதுதான் என் அடுத்த வேதனை....நீங்க அண்ணன் தம்பிங்க எதல்லாம் பேசிக்கிடுறீங்க...எவ்ளவு சேர்ந்துகிடுறீங்க...ஆனா இங்க ரெண்டுபேரும் சேர்ந்துக்கவே மாட்டாங்க.......

ஃஸ்கூல் போற வயசுல  இவளை இங்க கூட்டிட்டு வந்தோம்.... இங்க இருக்கவே மாட்டேன்னு இவ அழுகை, உடம்பு சரியாவே வரலை திரும்ப எங்கம்மாட்ட கொண்டுபோய் விடுற வரைக்கும்...அங்க எங்கம்மாவும் ஒரே அழுகை...பிள்ளைய என்ட்ட இருந்து பிரிக்காதன்னு...அவங்கட்ட இருந்துட்டால.... இவதான் அவங்க உலகம்னு ஆகிட்டு அவங்களுக்கு...

கொஞ்சம் பெருசானதும் வந்துடுவா... சேர்ந்துகிடுவான்னு நம்பியே நாள் போச்சு...

அதே நேரம் இங்க எங்க வீட்ல வசதி கூட கூட...சின்னவளுக்கும் பெரியவளுக்கு என்னல்லாம் செய்தமோ அதை எல்லாம் செய்து கொடுத்தோம்...ஆனாலும்...எங்கம்மா பெரியவளுக்குன்னா எல்லாம் செய்வ...சின்னவனா உனக்கு இளப்பம்தான்னு இவ முன்னாடியே பேசுவாங்க...என் அம்மா மிர்னிய குறை சொன்னா நான் எதிர்த்து பேசுவேன்ல...அது அவங்களுக்கு எப்படியோ எனக்கு மிர்னாதான் முக்கியம் இவள பிடிக்கலைனு நினைக்க வச்சுட்டு...

அது இவ மனசுலயும் பதிஞ்சுட்டு போல பெரியவட்ட பேச கூட மாட்டா... குழந்தையா இருக்கப்ப ஆரம்பிச்சது, இப்ப வரைக்குமே....பெரியவளாவது  இளையவட்ட போய் பேச ட்ரை பண்ணும்.....சின்னது எங்களல்லாம் வில்லிய பார்க்கிற மாதிரிதான் பார்க்கும்”

அறைக்குள் படுத்தபடி கதை கேட்டிருந்த வேரிக்கு இதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை...நடந்த விஷயங்களுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கிறதா....? அம்மாவும் பாட்டியும் விஷயங்களை கையாண்ட விதம் தவறாக இருக்கலாம்...ஆனால் அதன் அடிப்படை அன்பல்லவா....வேகமாக எழுந்தாள்.. கண்களில் நீர் கோர்க்க.........

 “ஆக இவ  என்ட்டயும் சேரலை....மிர்னாட்டயும் சேரலை...அதுவும் நைட் தூங்கிறப்ப இவளுக்கு வர்ற...அந்த...அந்த பிரச்சனைக்கு ட்ரீட்மெண்டுன்னு எதுவும் இல்லைனு தெரிஞ்சதுக்கு பின்ன....யாரும் இவளை கல்யாணமே செய்துக்க மாட்டாங்களோன்னு... எனக்கும் என் அம்மாவுக்குமே ஒரே வேதனை...ஒருவேளை இவ கடைசி காலத்துல கல்யாணம் இல்லாம தனியாள நிக்க வேண்டியதாச்சுன்னா...கூட பிறந்தவ உறவாவது வேணும் தானேன்னு எனக்கு அடுத்த பயம்....என் அம்மா அவங்க பேர்ல இருந்த மொத்த சொத்தையும் இவ பேர்ல எழுதிட்டாங்க.... இப்படி இருக்குறப்ப நான் எதை பேசி எதை சிரிக்க...?

இப்போ யோசிச்சு பார்த்தா....வேரி ஆரம்பத்துல இருந்து அவ உடம்புட்ட மட்டுமில்ல எங்க பண கஷ்டத்திட்டயும்... எங்க எல்லாரோட பயத்துட்டயும்....ஏமாற்றத்துட்டயும் ஒருவகையில் மாட்டிகிட்டு முழிச்சவ.... ரொம்ப கஷ்டபட்டுட்டா.....அதனால அவ ஏதாவது உங்கட்ட தப்பா பேசி இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க....என்ன இருந்தாலும் உங்கட்ட சொல்லாம அவ இங்க வந்தது தப்பு....எங்க வீட்ல இருக்றவரைக்கும் பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டா...உங்கட்ட இப்படி கத்துறா.... நீங்க அவ்ளவு சலுகை கொடுத்து வச்சிருக்கீங்கன்னு தெரியுது... இதை மனசுல வச்சுகிடாதீங்க...இன்னும் ரெண்டு மூனு நாளாவது இங்க இருந்து அவள கூட்டிட்டு போங்க....நாங்களும் நல்லவிதமா அவட்ட சொல்லி.... ”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.