(Reading time: 25 - 49 minutes)

2னால் அங்கு களஞ்சியம் ரூம் திறந்திருந்ததே தவிர உள்ளே எட்டிப் பார்த்தால் யாரும் இல்லை…

“அங்க அவங்க கட்டில் பக்கம் ஒரு குட்டி டேபிள் இருக்குது தான…..அதோட டாப்மோஸ்ட் ட்ராவ திற….” அடுத்த கட்டளை…

அடங்காமல் பட படத்தது அவள் அடி இதயம்….. ‘ இத யாரும் பார்த்தா கூட என்னவெல்லாமோ நினைக்க முடியுமே….ஆள் இல்லா ரூம்குள்ள வந்து அடுத்தவங்க ஜாமனை எடுக்கிறதுக்கு என்ன பேராம்?’ வாசலில் வேரூன்றி நின்று போனாள் இவள்.

“அந்த ட்ரால ஒரு வொயிட் கலர் குட்டி ப்ளாஸ்டிக் கன்டெய்னர்…..ரெட் லிட்டோட இருக்குல்ல….அதுக்குள்ள இருக்கிற டேப்லெட்ல ஒன்னை எடு…” தார்கிகா அடுத்த ஆர்டருக்கு போயிருந்தாள்.

இப்போது ‘இன்பாவின் சீக்கிரம் கூட்டிட்டுப் போய்டு மனோ….’ காதுக்குள் கேட்க….

தன்னை தானே சமாளித்து தார்கிகா சொன்னதை நிறைவேற்றினாள் இவள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்...

“இப்ப கிட்செனுக்கு போ….”

இங்கு தான் மனோ கொதித்துப் போனாள்….அவளுக்கு புரிந்துவிட்டது…… ‘இது ஸ்லீப்பிங் பில்லா இருக்கும்….இதை மித்ரனுக்கு கொடுக்க சொல்லப் போறா இந்த கிறுக்கு க்ராதகி….’

பல்லை கடித்து குரல் உயர்த்தாமல் உறுமினாள் மனோ…. “நீ நினைக்கிறத ஒரு காலமும் நான் செய்யப் போறது இல்ல….”

“இது உன் அத்த சாப்டுற ஒன்னுதானே….மோசமாலாம் ஒன்னும் செய்யாது ஜஸ்ட் தூக்கம் மட்டும் தான் வரும்….” என்னமோ அது மட்டும்தான் இவள் கவலை போல விளக்கினாள் தார்கிகா…

‘நம்புற ஒருத்தங்களை ஏமாத்றதுன்றது இவளுக்கு ஒன்னுமேவா தெரியாதுதான்’ என கசந்தாள் இவள்…

“நம்ம சீன்ல மித்ரன் வந்தா எல்லோருக்கும் ரிஸ்க்…ஏன் மித்ரனுக்கே ரிஸ்குதானே….. அங்க 6 பேர் இன்பா கூட இருக்காங்க…. அத்தனை பேரையும் ஒருத்தரா ஹேண்டில் பண்ணிடுவாரா மித்ரன்…..அப்டி யோசிச்சுப் பாரு மனோ” ஒருவிதமாய் ஒரு விளக்கம் சொன்னாள் தார்கிகா….

தார்கிகா குரலில் அப்பட்டமாய் தெரிந்தது அக்கறை தொனி….. ஆனால் இவளுக்கோ அடி வயிற்றில் புளி…..இன்பா கூட ஆறு பேரா…..!!!!

 “இந்த விஷயத்துல என்னால காம்ப்ரமைஸ் செய்ய முடியாது…..விஷயம் மித்ரனுக்கு தெரியக் கூடாதுன்றது ரொம்ப ரொம்ப முக்கியம்….அதனால நான் சொன்னதை செய் போ…” தார்கிகாவிடம் ஒரு வகை பிடிவாதம் குரலில்….

இன்பாவை நினைத்தபடி ஜூஸில் மாத்திரையை  கலக்கினாலும் மனம் எங்கும் ரணம் மனோவுக்கு…. இவளை அவன்  மிரட்டினப்ப மித்ரனுக்கும் இப்டித்தான்  இருந்திருக்கும் என்று ஏனோ வந்து போகிறது நினைவு….

‘இல்ல அவனுக்காவது அடுத்து கல்யாணம் செய்து இவளை தன் கைக்குள்ளதான் கொண்டு வரப் போறோம்னு ஆறுதல் இருந்திருக்கும்….இவள் என்ன நினச்சு ஆறுதல் பட்டுக்க…..?’

“ஜூஸை ஒரு சர்வென்ட்ட கொடுத்துவிடு…..நீ நேர்ல போய் கொடுத்தா உன் முகமே எதையாவது காட்டிக் கொடுத்துடும் போல…” தார்கிகா சொன்னதை செய்து முடிக்க இன்பா கூட உள்ள 6 பேர் விஷயம் போதுமானதாய் இருந்தது இவளுக்கு…

அடுத்தும் லைனில் இருந்தாள் தார்கிகா…… இவளை வீட்டின் லைப்ரெரிக்கு போகச் சொன்னாள் அவள்..... மித்ரன் தூங்க காத்திருக்கிறாள் என  மனோவுக்கும் புரிகிறது...

கொடுமையாய் கோரமாய் கழிந்தன அந்த நிமிடங்கள்....மனதிற்குள் சுழன்ற சூறாவளி மலையைக் கூட மாற்றித் தூக்கி அடிக்கும் வல்லமையுடன் வாய்த்த பக்கமெல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தத....

வெறித்திருந்த விடுதலை அற்ற அவள் மனகுதிரை எங்கெங்கோ கடந்து நுழைந்து ஓடியது…

எந்த சூழ்நிலையிலும் மித்ரன் இவள் அவனுக்கு தீங்கு நினைத்தாள் என நினைக்கப் போவது இல்லைதான்....தர்கியோட திட்டம் என்னதா இருந்தாலும் மித்ரனுக்கும் இவளுக்கும் இடையில் அது பிளவை உண்டு செய்யாது என்பதும் நிச்சயம்தான்....

ஆனால் எப்டியும் இது மனசுக்கு கஷ்டமா இருக்குதானே..... அவனுக்கு இருக்கோ இல்லையோ இவளுக்கு இருக்கு....

இப்படி பாய்ந்த சிந்தனை....

இப்ப இவளுக்கு இன்பா விஷயத்தில் மித்ரன் இவளோட செயலை புரிஞ்சுப்பான்….இவளை நம்புவான்னு இருக்கிற நம்பிக்கை தானே அவனுக்கு முன்பு இவள் மீது இருந்திருக்கும்….? அப்போ  இவளுக்கு ஆபத்துனதும், மித்ரனும் இவள் அவனை புரிஞ்சுப்பான்னு நம்பிதானே காரியத்தில் இறங்கி இருப்பான்….? என சடன் டர்ன் எடுத்தது.....

ஆபத்து இன்பாக்குன்னதுமே இவள் இவ்ளவு தூரம் இரங்குறாளே…..  அது மித்ரனுக்குன்னா என்ன செய்யமாட்டாள் இவள்??????

அவனுக்கு ஆபத்துன்னதும் அவனை கண்ணுக்குள்ள வச்சுகனும்னு இவள் துடிக்கிற மாதிரிதானே அவனுக்கும் இருந்திருக்கும்…? அதுவும் இவள் மீது ஷூட் அவ்ட் நடக்கிறப்ப கண்ணால பார்த்தவன் அவன்…. எத்தனை துடிச்சுப் போயிறுப்பான்…????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.