அது அவளை தீண்டிய நொடியே, நிமிர்ந்து கூட பார்க்கும் முன்னம்….தெரிந்து போயிற்று வந்திருப்பது யாரென்று…அவளவன்… !!!!!
ஏதோ ஒரு வகையில்… எப்படி என்று எதுவுமில்லை..…இந்த நிகழ்வில் அவளுக்கு சற்றும் ஆச்சர்யம் எதுவுமில்லை….எப்படியோ ஏனோ அவன் வருவான் என நம்பி இருந்தாள் அவள்….. அவன் வராமல் தீராது என்றும் ஒரு உள்ளுணர்வு…
இப்போது எதுவுமே தோன்றவில்லை நிம்மதியை தவிர…..
“பின் கேட்டுக்கு போ…” திரும்பிக் கூட பாராமல் சொல்லிய வண்ணம்…. மித்ரன் தன் எதிரிலிருந்த பல்ப்பை பார்த்து சுட்டான் கையிலிருந்த பிஸ்டலால்….
சத்தத்தில் அனைவரும் ஸ்தம்பித்து திரும்பிப் பார்க்க….
மனோவுக்கோ… இன்பா பத்தி அந்த நேரத்திலும் சொல்ல தோன்றியது… “அண்ணி…” என அவனுக்கு கவனப் படுத்தியவளுக்கு
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அவன் பிஸ்டலை ஹேண்டில் செய்றது அடிபட்ட கையால என்பது முதலில் உறைக்க…. அடுத்து என்ன சொல்ல வந்தாளோ…. “போன்னு சொன்னேன்….” அவன் கட்டளையில் அடுத்த நொடி அங்கிருந்து ஓடி இருந்தாள்…..
‘இத்தனை பேரை அவன் சமாளிக்கனும்…..இதில் இவள் வேறு அவனுக்கு இன்னொரு ரெஸ்பான்ஸிபிலிட்டியா இருக்கவா?’
இவள் பின் வாசலை கடக்கும் போது பிஸ்டலில் பயந்து... முன் வாசல் வழியாக வெளியே ஓடிய அத்தனை தடிமாடுகளும்....எழுப்பிய வித விதமான சத்தத்தில்....ப்ரச்சனை முடிந்துவிட்டது என புரிகிறது இவளுக்கு…... வேற போலீஸ் வந்திருக்கனும்....
சற்று நேரம் அங்கு நரக அமைதியாய் காத்திருந்தாள். ‘அவன் வெளியதான இருக்கனும்னு சொன்னான்...’
சோர்ந்து கலைந்திருந்த இன்பாவை தோளோடு பிடித்து கூட்டி வந்தான் இப்போது...
தனை நோக்கி வந்து கொண்டிருந்த அவனை கண்ணோடு கண்ணாக பார்த்திருந்தவளிடமிருந்து கழன்று விழுந்து கொண்டிருந்தன அத்தனை உணர்வுகளும்.... நிர்சலனமாய் மனோ...
இத்தனை பேர் முன்னால இயல்பாய்தான் இருந்தாக வேண்டும் இவள்...
இவளருகில் வரவும் இன்பா இவளை இறுக அணைத்துக் கொண்டாள்..... “சாரி மனோ.... அவ்ளவு தூரம் நீ சொல்லியும் முட்டாள்தனம் செய்துட்டேன்...என்னால எல்லோருக்கும் கஷ்டம்....” குலுங்கி அழுதாள் அவள்....
இன்னுமே அவள் உடல் நடுங்குவது மனோவுக்குப் புரிகிறது..... குற்ற மனப்பான்மையை இவளிடம் கொட்டினாலும் பயம் வேதனை வலி என எதையும் இளையவளான இவளிடம் அவள் பேசவில்லையோ....!
“பயப்படாதீங்க அண்ணி....இப்ப எல்லாம் முடிஞ்சுட்டு...நீங்க எதைப் பத்தியும் குழப்பிக்காதீங்க....” இவள் தனக்குத் தெரிந்த வகையில் ஆறுதல் சொல்ல துவங்க..
தன் மொபைலில் ஏதோ எண்ணை அழுத்தி இவளிடம் நீட்டினான் பார்த்திருந்த மித்ரன்....
“அம்மாவ வரச் சொல்லு...” அவனை ஒரு கணம் பார்த்த மனோவும் மொபைலை கையில் வாங்கிக் கொண்டாள்...
அத்யாவசிய தேவைக்கு கூட தன் அம்மாவிடம் நேரடியாக ஒரு வார்த்தை பேச இவனுக்கு முடியவில்லை என்று ஓடுகிறது உள்ளுக்குள்ளே..
அழுது கொண்டிருந்த இன்பாவோ சொல் சொல்லாதே என எதையும் முடிவாக சொல்லாமல் “அம்மாவுக்கு ஜோவன் விஷயம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க...” என்றாள் குரல் உடைய.... “
“ஆனா தெரியாம இருக்றதால இன்னும் கூட ப்ராப்ளமாகும் இன்பா....” சற்று கெஞ்சலாய் மித்ரன்.
அடுத்து இன்பா எதுவும் சொல்லவில்லை.... “அண்ணி மேல கிட்நாப் அட்டெம்ட்....பட் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...உங்க பையன் ஹேண்டில் பண்ணிட்டாங்க....நீங்க கொஞ்சம் இங்க வறீங்களா அத்த....அண்ணி ட்ரெஸ் கொஞ்சம் அழுக்காயிட்டு வேற ஒரு ட்ரெஸ் கொண்டு வறீங்களா வர்றப்ப....” என ரொம்ப ஷார்ட்டாக விஷயத்தை சொன்னாள் மனோ...
சின்ன சின்ன காயங்கள் இன்பாவுக்கு...
அடுத்த சற்று நேரத்தில் களஞ்சியம் வர .... அவரை கட்டிக் கொண்டு அப்படி அழுதாள் இன்பா... நட்பும் உறவும் ஆயிரம் இருந்தென்ன அடி படவும் அம்மாவைத்தான் தேடுகிறது அனைவருக்கும்....
உடை மாற்றச் செய்து அம்மாவோடு இன்பாவை மருத்துவ மனைக்கு முழு பாதுகாப்புடன் அனுப்பிய பின் இப்போது இவளும் அவனும் தனிமையாய்...
கடைசி கார் கண்ணை விட்டு விலகிச் செல்லவும் திரும்பி தன்னவனைப் பார்த்தது தான் தெரியும் மனோவுக்கு.... இறுகி அணைத்து அவன் கழுத்தோடு முகம் புதைத்திருந்தாள் இவள்...
அவனும் இவளை அணைத்து குழந்தையை பிடிப்பது போல் இவள் பின் தலையோடு பிடித்திருக்கிறான் என்பது மட்டும் தான் மனோவுக்கு தெரிந்தது....
மற்றபடி இடம் பொருள் ஏவல்....காரண காரியம்....என எதுவும்... எதுவுமே தோன்றவில்லை அவளுக்கு....
எதையுமே பேசவும் இல்லை இவள்....கேட்கவும் இல்லை அவன்......
தொடரும்!
{kunena_discuss:928}