(Reading time: 23 - 45 minutes)

தற்குள் வெற்றியிடமிருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து காதிற்கு கொடுத்தவள் முகம் இப்போது  சீரியசாய் மாறியது. சொல்லுங்க வெற்றி மாமா..' என்றாள்.

தேவி... மஞ்சு அங்க கிளம்பி வந்திட்டு இருக்கா... சென்னை வந்து அங்க இருந்து மதுரை வருவா..நானும் முடிஞ்ச அளவு சீக்கிரமா வந்திடுறேன்...

நீலாவை பத்தி தகவல் சொல்லுங்க... மஞ்சுவை அவ மாமியாரும் மாமனாரும் பார்த்துப்பாங்க...

அவளை பத்தி சொல்ல தான் கூப்பிட்டேன்... 

சொல்லுங்க... நான் லட்சுமி அம்மாக்கு வேற தகவல் சொல்லனும்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

உனக்கே நல்லா தெரியும் நார்த் இந்தியால இந்த டரக் அப்பியூஸ் எவ்வளவு பெரிய இஷ்யூவா இருக்குனு... டரக் மாஃப்பியாவை கன்டரோல் செய்யனும்னு பர்னிங் இஷ்யூவா இருக்கு...இங்க நடந்த சில பிரச்சனைகள்... அதனால பாதிக்கப்பட்ட ஏரியாவுல... அசாதாரணமான சூழ்னிலை...அதை அச்சுறுத்தும் பிராந்தியமா அறிவிச்சு... அங்க நடந்த சம்பங்களை விசாரிக்கவும்... சூழ்னிலையை இலகுவாக்கவும் டரக் மாஃப்பியாவை பத்தி விசாரிச்சு அறிக்கை கொடுக்கவும் தான் நீலாம்பரியை அப்பாயிண்ட் செய்திருக்கு செண்டர்ல் கவர்மண்ட்...அங்கே ஹரியானாவில தான் எதோ பேச்சு வார்த்தை நடத்த போனப்போ... துப்பாக்கி முனையில அந்த இண்டர்னல் அஜிடேட்டர்ஸ் காட்டுக்குள்ள கடத்திட்டு போயிட்டதா சொல்றாங்க... அவங்க தான் கடத்தினாங்கனு எந்த ஆதாரமும் இல்ல...பட் ரெண்டு நாளா அவளை காணல...

ஏற்கனவே அந்த ஸ்டேட்ல தான் சீப் செக்ரடரியா இருந்தா...யங்க் பர்சன் ஃவார் திஸ் ரோல்..அவளுக்கு செண்டர்ல் டிப்பார்ட்மண்ட்ல போஸ்டிங்க் ரெடியாகிட்டு இருக்குனு ரொம்ப நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்...சோ நிஜமாவே அவங்கதான் கடத்தியிருக்காங்கலானு கவர்மண்ட் திவிர விசாரணையிலும் தேடுதல் வேட்டையிலும் இறங்கியிருக்காங்க... ஏற்கனவே அங்க இருக்க பர்னிங்க் இஷ்யூவோட இதுவும் இப்போ சேர்ந்து...கவர்மண்ட் வேகமா ஸ்டேப்ஸ் எடுத்துட்டு இருக்காங்க... கவர்மண்ட்டுக்கு ஷி இஸ் ஏ க்ரிட்டிகள் ரிசோர்ஸ்... எப்படியும் அவளை மீட்டுடுவாங்க ஆர் கண்டுபிடிச்சுடுவாங்க...இன் ஏ டே ஆர் டூ ஷி வில் பீ பேக்!

இப்போ அம்மாக்கு என்ன பதில் சொல்றது??

ம்ம்ம்...அத்தைய கிளம்பி இங்க வரசொல்லு...

அதை நான் ஏற்கனவே செய்தாச்சு....நியூ யார்க்ல ஆல்ரெடி அவங்களும் தம்பியும் பிளைட் ஏறியாச்சு...

தேவா இல்ல சிவாகிட்ட விவரம் சொன்னியா??

ஏன் அவங்களுக்கு மதியை கடத்திட்டாங்கனு தெரியாதா? நியூஸ் பார்த்திருக்க மாட்டாங்களா...அப்படியே பார்த்துட்டாலும்... அதுகேல்லாம் அக்கறை இருக்கனும் வெற்றி!

லூசு... நான் சொன்னது பாட்டிய பத்தி...அந்த மதி லூசப்பத்தி யாரு சொன்னா...

நான் சொல்லலை ... சொல்லவும் முடியாது போடா!

மரியாதைனு எதுவுமே கிடையாது... நம்ம வீட்டை சேர்ந்தவங்க யாராவது பக்கத்துல இருக்காங்களா??

எல்லாரும் இங்கதான் இருக்காங்க....

யாரேல்லாம்?

சிவா தாத்தா.. சுந்தரம் மாமா.. தெய்வா மாமி...திரு மாமா ஆனந்தி மாமி... சரஸ் சித்தி... வேதா சித்தப்பா..

தம்பி எங்க??

வசியும்... நித்தியும்.. எழில்..இளாவையும் கூட்டிட்டு வராங்க...வசந்தி அண்ணி தியாகு அண்ணாவோட வராங்க..

அப்பாகிட்ட கொடு...

பேசுங்க.. ஸ்பீக்கர்ல தான் போட்டிருக்கேன்..

அப்பா... உங்க அண்ணாக்கு முதல்ல சொல்லுங்க... ஏன் தாத்தாக்குகூட சொல்லனும்னு தெரியலையா... நீங்க சொல்றீங்களா.. இல்ல நானே சொல்லவா??

இல்லப்பா நானே சொல்லறேன்... நீ சீக்கிரம் வா... நான் போனை வெச்சிடறேன்...' என்றபடி போனை வைத்தார் சுந்தரம்.

தேவி...அண்ணாக்கு நானே சொல்லிடறேன்..அவர் மத்தவங்களுக்கு சொல்லுவார்...' என்றபடி அவர் நகர்ந்தார்.

ஐய்யோ..நானே சொல்லலைனா... அதுக்கு வேற சாமியாடுவானே இந்த தேவா லூசு...இப்போ என்ன செய்ய??' மாமா.. இருங்க நானே சொல்லிடுறேன்...அப்புறம் யாரு பாட்டு வாங்கறது... வெயிட்!' என்றபடி அவர் பின்னே ஓடினாள் தேவமனோகரி.

அதிசயமாய் பார்த்திருந்த ஹரியையும் பரத்தையும் பார்த்த தெய்வா மாமி...அவ அப்படிதான் தம்பி...வயசாச்சே தவிர கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல...

நீங்க...மா...

நான் அவளோட பெரிய மாமி தெய்வநாயகி..அதோ அவளுக்கு முன்னாடி போறாரே சுந்தரமூர்த்தி அவரோட மனைவி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.