தாத்தாவுக்கு...?
அவரோட மூத்த மருமக நான்... இப்போ போன்ல பேசினது என்னோட பையன்... வைபவ் வெற்றிச்செல்வன்...
அப்போ வசந்தி...?
வசந்தி என் பொண்ணுப்பா... தியாகராஜன் எங்க மூத்த மாப்பிள்ளை!
இவங்க..??' என்றான் பரத் ஆர்வமாய்...
இவன் என்னோட ரெண்டாவது மகன் திருநாவுக்கரசு... என் மருமக ஆனந்தி... இவ என்னோட கடைக்குட்டி பொண்ணு சரஸ்வதி... அவர் என் மாப்பிள்ளை வேதமூர்த்தி...என் பொண்ணு லட்சுமி ஊர்ல இருந்து வந்திட்டு இருக்கா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
இவங்க பிள்ளைங்கலாம்?? என்றான் ஹரி.
திரு..ஆனந்தி..க்கு ஒரு பொண்ணு ஒரு பையன்... நித்திலவள்ளி... வினய் வசீகரன்.
சரஸ்வதி வேதமூர்த்தி க்கும் ஒரு பொண்ணு ஒரு பையன்... எழிலரசி, இந்தரஜித் இளவழகன்.
லட்சுமி ராமச்சந்திரனுக்கும் ஒரு பொண்ணு ஒரு பையன்... நீலாம்பரி.. நிவன் அருள்மொழி...
அப்போ கடத்தப்பட்ட ஐஏஸ் ஆப்பீசர் உங்க பேத்தியா?? டாக்டர் தேவா வோட சிஸ்டரா?
ஆமாம் பா....
சூழ்னிலையை இலகுவாக்க ஹரி பேச்சை மாற்றினான்.. சூப்பர் தாத்தா...நாலு பசங்களா உங்களுக்கு?? சின்ன வயசில இருந்தே காதல் மன்னன் தான் போல!' என்றான்.
நாலு பசங்களா?? அஞ்சு பிள்ளைங்க எனக்கு...
அப்போ டாக்டரோட பேரண்ட்ஸ்...
என் மூத்த மக பார்வதியும் அவ புருஷன் பரமேஸ்வரனும்...அவ பிள்ளைங்க தேவமனோகரி... தேவமஞ்சரி...
அவங்க எங்க இப்போ... காணும் அவங்களை?
அவங்க இப்போ இந்த உலகத்துல இல்ல!!' என்றார் சிவப்பிரகாசம்.
என்னது டாக்டரோட பேரண்ட்ஸ் இப்போ உயிரோட இல்லையா..??
தொடரும்...
{kunena_discuss:1000}