அவர்கள் வீட்டு கிணற்றிலிருந்து சற்று தொலைவில் ஒரு டாய்லட் மட்டும் உண்டு இவர்கள் வீட்டில்…..
அது பொதுவாக அங்கு எல்லோரும் அப்படி அமைப்பது வழக்கம்…அந்த வகையில் அமைக்கப் பட்டிருக்க…..
அதற்கு எக்ஃஸாஸ்டர் ஃபேன் இல்லாம இருப்பதால்…..அதன் ரூஃபுக்கும்…கதவிற்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்கும்….
இவள் கிணத்தின் சுவரில் அமர்ந்து பர்வையை சுற்றியதில் ஏதேச்சையாய் கண்ணில் படுகிறது அந்த இடைவெளி…..அதன் வழியே தெருகிறது உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறின் ஒரு பகுதி….
கிணத்துல வாளியோட இருக்குமே அந்த கயிறுதான்…. ‘சே கயிறுக்கு அங்க என்ன வேலை…என்ன குளிக்கவிடாம இதெல்லாம் சதி செய்துடா…..’ மனதில் இருந்தவனிடம் இவள் சொல்லிக் கொண்டு சுவரிலிருந்து இறங்க நினைத்த நொடி…
இவள் பார்வைக்கு தெரிந்த அந்த ஒரு அடி கேப்பில்…கயிறின் பக்கத்தில் கீழிறிருந்து ஒரு கறுப்பு திட்டு வந்து….. வந்து….. போகிறது…
ஹான்….. இது என்ன? என ஆரம்பித்த நினைவை முடிக்க கூட முடியவில்லை…சட்டென இவளுக்கு புரியும் விஷயத்தை நம்பவும் முடியவில்லை….
கண்டிப்பா இருக்காது….ஆனா இருக்குதே..ஏன்…???????
உயிர் வெறுக்க ஓடிப் போய் ஓங்கி கதவில் ஓர் இடி…
“ஏய் யார் உள்ள…?”
“……………………….”
“யாரு….???” இப்போ கதவ திறக்கல நான் கடப்பாரையால உடைப்பேன்…..”
“……………………………”
அவசர அவசரமாக சுற்றுமுற்றும் பார்த்தாள்…..
தோட்ட மண் வெட்டிதான் கையில் கிடைக்கிறது …..
ஓங்கி ஒரு வெட்டு கதவில்….. வெட்டிய வெட்டலில் கதவு திறக்கவில்லை…. ஆனால் உள்ளிருந்த இவள் தங்கை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்…
“பவி…ப்ளீஸ் பவி…ப்ளீஸ் ப்ளீஃஸ்…என்னை சாகவிட்டுடு…..”
கையிலிருந்த மண் வெட்டியை மிக கூலாக தூக்கிப் போட்டவள் “ ஆமா அதுக்குதான் நான் டாக்டருக்கு படிச்சது….அப்றம்…?”
சொல்லிய படி தங்கை அருகில் போனவள்…..
இழுத்து வைத்தாள் ஒன்று அவள் கன்னத்தில்….. விழுந்த வேகத்தில் இவள் கை காந்தியது…
“கிறுக்காடி நீ….?”
கேட்டபடி எதிரிலிருந்தவளை இழுத்து அணைத்திருந்தாள்….
Friends இன்னைக்கு ஃபைனல் எப்பி அனுப்ப ஆசைதான்….பட் கொஞ்சம் ப்ளான் சேஞ்ச்…..அடுத்த வாரம் கண்டிப்பா முடிச்சுடுறேன்…..பொறுத்துக் கொள்ளவும்….. நன்றி…
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!
{kunena_discuss:929}