“ஜெய்……..” என அதிர்ச்சியோடு பார்த்த இருவரையும் நோக்கி அமைதியாக வந்தான் ஜெய்…
“நான் இங்க இந்த நேரத்துல வருவேன்னு நீ நினைக்கலைல்ல பைரவ்?....”
பைரவின் முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் ஒருசேர பிரதிபலிக்க,
“வாசலில் காவலுக்கு இருந்த இரண்டு பேரும் தூங்கிட்டாங்க… அதனால ஈசியா இவனை இங்க இருந்து கூட்டிட்டு போகலாம்னு நினைச்சியா பைரவ்?...”
ஜெய் கேட்டதும் தான் பைரவிற்கு வாசலில் இரண்டு போலீஸ்காரர்கள் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருப்பது நினைவிற்கு வந்து போனது…
“வெளிய படுத்திருந்தது நீதானா?.....”
“சாட்சாத் நானே தான்…”
அப்போ இன்னொருத்தன் யார்?..”
“நான் தாண்டா அது…” என்றபடி வந்தான் இஷானும்…
“எங்க ஆளுங்க வெளியில தான் இருக்குறாங்க… ஒருகுரல் கொடுத்தா உன்னையும் உன் ஃப்ரெண்டையும் இல்லாம பண்ணிடுவாங்க பார்க்குறீயா?...” என குமார் மிரட்ட,
“அப்படியா எங்க குரல் கொடு பார்ப்போம்…” என அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் ஜெய்…
குமார் பின்வாங்க, பைரவ் அவனை பிடித்து நிறுத்தினான் தன்பக்கம்…
“என் ஆளுங்களை என்னடா செஞ்ச?...”
“பரவாயில்ல… உன் ஆளுங்க எழும்பை எண்ணிட்டேன்னு இப்போவாச்சும் தெரிஞ்சதே… குட்… குட்…”
பைரவ் அவனை ஆங்காரத்தோடு பார்க்க, ஜெய் சிரித்தான்…
“அப்புறம் பைரவ்… கை எப்படி இருக்கு?... அசைக்க முடியுதா?... ஏன்னா நாளைக்கு ஜெய்யில களி திங்கணும் பாரு… அதான்…” என்ற ஜெய்யை நோக்கி வேகமாக வந்த பைரவ் ஜெய்யின் சட்டையைப் பிடிக்க போக, ஜெய் அவன் கையை பிடித்துக்கொண்டான் அழுத்தமாய்…
பைரவினால் தனது கையை அசைக்க முடியாது போக, ஜெய் அந்த கையை, இன்னும் பலமாக அழுத்தி பிடித்தான்…
ஏற்கனவே தோட்டா துளைத்திருந்த கை, இப்போது தான் சரியாகி வந்த நிலையில் ஜெய் தனது முழு பலத்தையும் பைரவின் கரம் மீது காட்ட, பைரவ் துடித்தான்…
“டேய் விடுடா… அவனை…” என ஓடிவந்த குமாரின் கழுத்தைப் பிடித்துக்கொண்டான் இஷான்…
“இந்த கை நிறைய வேலை செஞ்சிட்டுல்ல பைரவ்… உன்னைப் பார்க்குற அன்னைக்கு உனக்கு பரிசு கொடுப்பேன்னு உன் நண்பன் கிட்ட சொல்லியிருந்தேன்… அதுபடியே அன்னைக்கு ஒரு சின்ன பரிசு கொடுத்தேன் இல்லையா இந்த கையில… அதே போல இன்னைக்கு காலையில உன் நண்பன் கிட்ட உன்னை சிறப்பா கவனிப்பேன்னு சொல்லியிருந்தேன்… சொன்ன வாக்கை காப்பாத்தணும்ல… அதனால….” என்று சொல்லிக்கொண்டே அவனின் கையை இன்னொரு கரத்தினாலும் பற்றினான் ஜெய்…
“டேய்… விடுடா…. அவனை எதுவும் செஞ்சிடாத…” என கெஞ்சிய குமாரின் வார்த்தைகளை காதிலேயே வாங்காது,
சதியின் உயிர் பறிக்க, பைரவ் வாளை ஓங்கிய நொடிகளை மனக்கண்ணில் கொண்டு வந்த ஜெய், அவனது கையை பட்டென வளைத்து ஒடிக்க, அவன் அலறினான்…
அதன் பின், டாக்டரை அழைத்து பைரவின் கைகளில் கட்டுப்போட சொல்லிவிட்டு, இருவரையும் மருத்துவனையில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் ஜெய்…
அவனை ஜெயிலுக்குள் தள்ளுவதற்காக அனைத்து ஏற்பாடையும் செய்து வைத்திருந்தவன், விடியும் வரை காத்திருந்தான்…,
விடிந்ததும் அவனது ஆட்களையும், அவனையும் அழைத்துக்கொண்டு, கோர்ட்டிற்கு சென்று இருவருக்கும் தண்டனை வாங்கி கொடுத்து, ஜெயிலுக்குள் அடைக்க, இருவரின் முகத்திலும் குரோதம் கொப்பளித்தது…
“இன்னைக்கு என்னை உள்ளதள்ளிட்டேன்னு ரொம்ப சந்தோஷப்படாத ஜெய்… என்னைக்கு இருந்தாலும் உன் உயிரைப் பறிக்காம விடமாட்டேன்… இது சத்தியம்…”
“அதுக்கும் முன்னாடி நான் உன் உயிரை எடுத்துடுவேன்… இனி நீ நெருங்கவே முடியாதுடா என் உயிரை… காலம் முழுக்க உனக்கு இந்த ஜெயில் தான்…”
“ஒருநாள் நான் இங்க இருந்து தப்பிப்பேண்டா… அப்ப தெரியும் உனக்கு நான் யாருன்னு…”
“அந்த ஒருநாளுக்காக நான் காத்திருக்கிறேன் பைரவ்… வரட்டா….” என்ற ஜெய் தன் கண்ணாடியை அணிந்து கொண்டு சிரித்தபடி அந்த ஜெயிலை விட்டு வெளியேற, பைரவின் கத்தல் காதில் கேட்டது…
அதை அலட்சியம் செய்தவனாய், அங்கிருந்து கமிஷனர் அலுவலகம் வந்தவனை, இஷான் வந்து வரவேற்றான்…
“மச்சான் வாடா… உன்னை கமிஷனர் கூப்பிடுறார்… அவசரமாம்…”
“இதோ வரேண்டா…” என்றவனும் வேகமாக இஷானோடு சேர்ந்து அவரின் அறைக்குள் நுழைந்தான்…
“வெரிகுட்… மிஸ்டர் ஜெய் & இஷான்… இத்தனை நாள் ஆட்டம் காட்டிட்டிருந்த ரெண்டு ரவுடியை பிடிச்சு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கீங்க… நிஜமாவே ரொம்ப பெருமையா இருக்கு…”
“இட்ஸ் அவர் டியூட்டி சார்…” என இருவருமே சொல்ல
“வெல்… இதை நீங்க உங்க கடமைன்னு சொல்லும்போது டிபார்ட்மெண்டும் தன் கடமையை செய்யணும் இல்லையா?...” என்றவரை புரியாமல் இருவரும் பார்க்க, அவரோ சிரித்தார்…
{kunena_discuss:1001}