“கண்டிஷன் எல்லாம் முடிஞ்சதா?... இல்ல இன்னும் எதாவது இருக்குதா?...”
“…………”
“கேட்குறேன்ல பதில் சொன்னாதான் என்னவாம் உங்களுக்கு?...”
“………..”
“பேசமாட்டீங்களே….. ம்ம்… அங்க உங்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்பீங்களே… அது எனக்காகத்தான?... எனக்கு அது நல்லாவே தெரியும்…”
“தெரிஞ்சா சரி….”
சட்டென அவனும் பதில் சொல்லிவிட, அவள் முறைப்பது போல் ஆரம்பித்து பின் சிரித்தாள்…
“ஓ… அப்படியா?... அங்கயும் வந்து சார் வேலைதான் பார்ப்பீங்களா?... எங்ககூட வெளிய எல்லாம் வர மாட்டீங்க?....”
“ஆமா…..”
“ஏன்????...”
“தைஜூ கிட்ட சொன்னேனே…”
“பரவாயில்லை… இப்போ எங்கிட்டயும் சொல்லுங்க… நானும் உச்சி குளிர கேட்டுக்குறேன்…”
அவள் சற்று குதர்க்கமாக பேச, அவன் அவளை பார்த்தான்…
அந்த பார்வைக்காகவே காத்திருந்தது போல், அவள் இமைகள் அவனது கருவிழியை சிறை செய்ய முனைய, அவன் சில விநாடிகள் அதில் சிக்கி பின் நிமிடத்தில் அதிலிருந்து வெளிவந்தான் உடனேயே…
“சொல்லுங்க… உங்க பாசமான தங்கச்சிகிட்ட என்ன சொன்னீங்க?...”
“அங்க வர்றதே வேலை விஷயமாதான்… போதுமா?... வழியை விடு….”
“வேலை விஷயம்?... ம்ம்… அப்புறம்?....”
“நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்….”
“சொன்னா கேட்கமாட்டேன்னு நானும் சொன்னேனா என்ன?...”
“பச்… வழியை விடு…”
“லவ் பண்ணுற பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தை நின்னு பேசுறதுல உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?...”
“பச்… உளறாத….”
“யாரு நான் உளறுறேனா?... ஹ்ம்ம்… அப்படித்தான் தெரியும்…. ஏன்னா நேத்து வெளிப்பட்ட உங்களோட காதல் கூட உங்களுக்கு உளறலா தான் இருக்கும்…”
“………………..”
“என்ன வார்த்தையை தேடுறீங்களா?... என்னை சமாளிக்க….”
“…………….”
“இந்த கண்ணுல தெரிஞ்ச தவிப்பு… இந்த இதயத்துல கேட்ட துடிப்பு… இந்த நெஞ்சுல என் கை பட்டதும் இந்த உடம்புல உண்டான ஒரு அதிர்வு…. இந்த கையால என் கையை பிடிச்ச அழுத்தம்… பிடிவாதமா பேசாம மௌனமா இருக்குற இந்த உதடுகளிலிருந்து வந்த வார்த்தைகள்… அதெல்லாம் தான் உண்மை… இப்போ எங்கிட்ட காட்டுற இந்த ஒதுக்கம், கோபம் எல்லாம் பொய்… பொய் மட்டும் தான்… துளி கூட உண்மை இல்லை…”
“………….”
அவளின் வார்த்தைக்கு, அவன் பதிலாய் எதுவுமே பேசாமல் இருப்பதை பார்த்தவள்,
“யாருக்காக இந்த பொய் வேஷம்?... அவ்வளவு காதலை வச்சிட்டு எப்படி உங்களால என்னை இப்படி தள்ளிவச்சு பார்க்க முடியுது?... சொல்லுங்க…” என சற்றே ஆதங்கத்துடன் கேட்க,
“எல்லாரும் பார்க்குறாங்க… வழியை விடு…” என்றான் அவன் சிடுசிடுப்புடன்….
“பார்த்தா பார்க்கட்டும்… அதப்பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை… அக்கறையும் இல்லை…”
“எனக்கு இருக்கு… விலகி நில்லு….”
“விலகமாட்டேன்… விலகவும் முடியாது…”
“அப்போ நான் விலகி போறேன்…” என்றவன் திரும்பி நடக்க பார்க்க, அவள் அவனின் முன் வந்து தடுத்தாள்…
“உங்களாலயும் விலக முடியாது… என்னையும் விலகவிட முடியாதுன்னு நல்லாவே நான் தெரிஞ்சிகிட்டேன் ஐபிஎஸ் ஆஃபீசர் அவர்களே…”
அவளின் பதிலில் கோபமானவன் அவளை முறைக்க ஆரம்பிக்க,
“என்ன பார்க்குறீங்க?... நான் உண்மையை தான சொன்னேன்… ஒரு சின்ன நெருப்பு பட்டதுக்கே நேத்து அப்படி துடிச்சீங்களே… அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?...”
அவள் கேட்டதும், அவளை சமாளிக்க வாய் திறந்தவனை பேச விடாது தடுத்தவள்,
“இந்த மனிதாபிமானம் மண்ணாங்கட்டின்னு எதாவது வாய்க்கு வந்ததை உளறினீங்க அப்புறம் கெட்ட கோபம் வந்துடும் சொல்லிட்டேன்…” என கண்களை உருட்டி, உதட்டை சுழிக்க, அவனுக்கு அவளின் செயல் சிரிப்பை வரவழைத்தது… இருந்தும் வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு,
அவள் அடுத்து பேசும் முன், அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் ஜாக்கிங்கை தொடர, ஒரு கணம் இமை மூடி அவனை நினைத்தபடி, விழி திறந்தவள் அவனது பெயரை தன் உதடுகளில் உச்சரிக்க, வேகமாக ஓடிக்கொண்டே போனவன் சட்டென நின்று அவள் புறம் திரும்பி பார்த்தான்…
அதே நேரம் சரியாக இஷான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்….
“இங்க இருக்குறேன்… வா…” என கையை காட்டிவிட்டு ஜெய் மீண்டும் ஓட ஆரம்பிக்க, அவள் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தது…