(Reading time: 22 - 43 minutes)

பிரம்மரிஷியின் சத்தமான அழுத்தமான பதில் கேட்டு இஷான் அதிர்ச்சியானான் என்றால், அதுவரை தன்னுணர்வு இல்லாது இருந்த ஜெய்யின் செவிகளில் நெருப்பு என்ற வார்த்தை விழ, அவன் கால்கள் படக்கென எழுந்து கொண்டது….

“அண்ணா……” என்றபடி தைஜூ விழிக்க, இஷானோ என்ன நடக்கிறது என புரியாமல் போனான்…

எழுந்து நின்றவனின் உள்ளம் பதற, கண்களை இறுக மூடியபடி திரும்பினான் அவன்…

“ஜெய்…..” என இஷான் அவனை அழைக்க,

விழி திறந்தவனின் பார்வையில், சதி நின்றிருந்தாள் முகம் எங்கும் அப்பிய கவலையோடு….

உச்சி முதல் பாதம் வரை அவளை அவன் விழிகள் ஆராய, அவளோ அவனருகிலேயே வந்துவிட்டாள் வேகமாய்…

“உங்க….ளுக்……கு…….. எது…..வு…….மி…..ல்….லை…..யே??……………”

திக்கி திக்கி அவள் வார்த்தைகள் வெளிவர, அவனுக்கு உள்ளம் வலித்தது…

“அவனுக்கு எதுவுமில்ல சதி… அவன் சரியாகிடுவான்… ஒன்னுமில்லை… நீ போய் தூங்கு…”

பிரம்மரிஷி அவளிடம் எடுத்து சொல்ல, அவள் அசையாதிருந்தாள்…

“இல்ல தா….த்…..தா… அவர் என்….ன…..மோ போ……ல….. இரு…க்கு….றதைப்….. பார்….த்……..தா….. ப…..ய…மா…யி…...”

அவள் சொல்லிக்கூட முடிக்கவில்லை,

“எதுக்கு பயம்?… பயமெல்லாம் வேண்டாம்… எனக்கு எதுவும் இல்ல… நான் நல்லா இருக்குறேன்… நீ போய் தூங்கு….”

எந்த பிசிறும் இல்லாது வெளிவந்தது ஜெய்யின் குரல்…

அவன் சொன்னதும், அவனை ஏறிட்டவள், “நிஜமா?.....” எனக் கேட்க,

“நிஜமாதான்…..” என்றான் அவனும் அவளைப் பார்த்துக்கொண்டே….

“ஹ்ம்ம்…..” என்றவள் அவனை விட்டு பார்வையை அகற்றாதவளாய் இருக்க,

ஒரு நொடி விழி மூடி தனக்கு எதுவுமில்லை என சிறு தலை அசைப்போடு அவன் சொல்ல, அவள் அதரங்கள் லேசாக விரிந்தது…

அது ஒன்றே தனக்கு போதும் என அவள் மனம் சொல்லியதோ என்னவோ, மெதுவாக அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவள், தன் கண்ணிலிருந்து மறையும் வரை, லேசான புன்னகையை தன் முகத்தில் ஒட்டிக்கொண்டான் ஜெய்…

அவளைத் தொடர்ந்து தைஜூவும் சதியின் பின்னே செல்ல, இஷான் அமைதியாக பிரம்மரிஷியையும், ஜெய்யையும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்…

“சிவா……. இங்க பாரு….”

சதி சென்றதும் பிரம்மரிஷி அழைக்க, அவர்புறம் திரும்பினான் ஜெய்…

“மனசைப் போட்டு குழப்பிக்காத… கண்ட அனைத்தும் நிஜமா என்ற ஆராய்ச்சிக்கும் இப்போது நீ போகவேண்டாம்… நிம்மதியா படுத்து தூங்கு…” என்றபடி அவனின் உச்சந்தலையில் கைவைத்து அவர் வருட, அவன் விழிகள் சொக்கியது….

“இஷான்…. நீயும் தூங்கு… எதையும் யோசிக்காம….” என்றபடி அவனது கரத்தினை அவர் தொட, இஷானின் மனம் வெற்றிடமாகி தூக்கம் வந்து அதை நிரப்பியது….

“சரி தாத்தா….. நீங்களும் தூங்குங்க….” என ஜெய் சொன்னதும், சரி என்றபடி அறையைவிட்டு அவர் வெளியேற, ஜெய்யும் இஷானும் கட்டிலில் அமர்ந்தனர்…

ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… தூக்கம் கண்களைத் தழுவ, தங்களையும் மறந்து துயில் கொண்டனர் இருவரும்…

அதிகாலை விடிவதற்குள் எழுந்து, வீட்டிற்கு அருகிலேயே ஜாக்கிங்க் சென்றான் ஜெய்…

அவனது மனம் முழுவதும் சில மணி நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளிலேயே இருக்க, மௌனமாக ஓடிக்கொண்டிருந்தான் ஜெய்…

அப்போது,

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா?... எதுக்கு இப்படி என் பின்னாடியே வந்து என்னை தொல்லை பண்ணுற?...”

ஒரு பெண் கோபமாக தன்னருகில் நின்றுகொண்டிருந்த ஆணிடம் பேசிக்கொண்டிருந்தாள்…

“நீ வருவேன்னு தெரிஞ்சு தான் நான் சீக்கிரமே கிளம்பி வந்தேன் இன்னைக்கு… உனக்கு முன்னாடி ஜாக்கிங்க் முடிச்சிட்டு போயிடலாம்னு… கடைசியில எல்லாமே நான் நினைச்சதுக்கு மாறா தான் நடக்குது… சே….”

அந்த பெண் நொந்து போனவளாய் பேச, அவள் எதிரே இருந்தவன் சிரித்தான்…

“அதுதான் டார்லிங்க் விதி… நீ எங்க போனாலும் என் கண்பார்வையிலிருந்து தப்பவே முடியாது….”

“சீ… அப்படி சொல்லாத….”

அவள் வேகமாக முகம் சுளிக்க, அவனது கண்கள் இடுங்கியது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.