அதே நேரத்தில் அங்கே அபர்ணாவின் வீட்டில்
குழப்பத்தில் தோய்ந்து போனவளாக மொட்டை மாடியில் இங்குமங்கும் நடந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. அவர்கள் பகுதியில் மழை நின்று போய் சில்லென்ற தென்றல் உலவிக்கொண்டிருந்தது.
'அம்.....மா....டி... இந்த வெதர்லே என்ன இ...வ்வ...ள...வு டென்ஷன் கூல்... கூல்... சிஸ்...' என்றபடியே அவள் அருகில் வந்து தனது கையில் இருந்த தட்டில் இருந்த உருளைகிழங்கு வறுவலை அவளிடம் நீட்டினாள் அஸ்வினி. 'உனக்கு பிடிக்குமேன்னு கஷ்டபட்டு அம்மா செஞ்சதை நான் கஷ்டபட்டு மாடி ஏறி எடுத்திட்டு வந்தேன்..'
அக்கா தங்கை உறவு எத்தனை அழகு!!! அதுவும் அச்சு அசலாக நம்மை உரித்து வைத்திருக்கும் ஒரு தங்கை எப்போதும் நம்முடனே இருப்பது எத்தனை இனிதான வரம்!!! நினைத்துக்கொண்டாள் அபர்ணா. ஆனால் இந்த உருவ ஒற்றுமை வைத்து அஸ்வினி பின்னால் ஒரு நாள் விளையாட போகும் விளையாட்டு பற்றி அறிந்திருக்கவில்லை அபர்ணா
வானில் பறக்கும் அவள் தரையில் இருக்கும் நேரங்கள் மிகக்குறைவு. அதானாலேயே இப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்துதான் போயிருக்கின்றன. .
சுவற்றில் சாய்ந்து அமர்ந்த தங்கையின் அருகில் அமர்ந்து அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள் அபர்ணா.
'எங்க அக்கா முகத்திலே இப்போ எல்லாம் சிரிப்பு கம்மி ஆயிட்டே வருது...' என்றாள் அஸ்வினி அர்த்தம் பொதிந்த குரலில்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
'ம்...
என்ன ம்??? என்னாச்சு அப்பு' அவள் குரலில் வாஞ்சை வந்து ஒட்டிக்கொண்டது
'எனக்கு இந்த ஐடி பிடிக்கலை அனி..' என்றாள் அக்கா. 'வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்'
'வேலையை விடப்போறியா??? குரலில் வியப்பின் அலை அடிக்க அபர்ணாவின் முகம் நிமிர்த்தி கேட்டாள் அஸ்வினி.
மெல்ல தலை அசைத்தாள் அபர்ணா. இன்று காலையில் அலுவலகத்தில் நடந்ததை அவள் சொல்லி முடிக்க
'யூஸ்லெஸ் ஆ??? பளார்னு அறைய வேண்டியது தானே அவனை???' அவள் கேட்ட விதம் ஒரு முறை பரத்தை நினைவு படுத்தியது அபர்ணாவுக்கு.
'உன்னை சுத்தி இருக்கறது எல்லாமே ஏன் இப்படியே இருக்குன்னு தெரியலை. வேண்டாம் தூக்கி போட்டுடு வேலையை...' பட்டென சொன்னாள் அஸ்வினி.
ஆனா... அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன் அனி...'
'அக்கா... ' என்றாள் இதமாக உனக்கு நான் முன்னாடியே சொல்லி இருக்கேன் யார்கிட்டேயும் உன் தன்மானத்தை விட்டு நீ கீழே இறங்குறதிலே எனக்கு உடன்பாடே இல்லை.. தேவை இல்லை தூக்கி போடு பார்த்துக்கலாம்.' என்றாள் தட்டில் இருந்த வறுவலை இன்னும் கொஞ்சமாக எடுத்து அக்காவிடம் நீட்டியபடியே. பின்னாடி நடக்கறதை பத்தி எல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.
'இன்னைக்கு பாடிட்டு வந்தப்புறம் இந்த வேலையை விட்டாலும் இந்த உலகத்திலே நாம செய்யறதுக்கு வேறே நிறைய விஷயங்கள் இருக்குன்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு ' தனது விரல்களை பார்த்துக்கொண்டே அபர்ணா சொல்ல
'குட்... வெரி குட்...' என்றபடியே அபர்ணாவை பார்த்தாள் அஸ்வினி. அபர்ணாவிடம் தன்னம்பிக்கை கொஞ்சம் கூடி இருப்பது போல் இருந்தது. இது கூட ஒரு நல்ல ஒரு நல்ல திருப்பம் தானோ என்று தோன்றியது அவளுக்கு.
அப்பாகிட்டே சொல்லிட்டியாடா???'
'இல்லை முதல்லே உன்கிட்டே தான் கேட்கிறேன்..'
'உனக்கு பிடிக்கலை இல்ல விட்டுடு. எல்லாம் சரியா நடக்கும் பார்த்துக்கலாம்...'
'ஷூர்???'
'ஷூர்..' அஸ்வினி புன்னகையுடன் சொல்ல அவள் தோளில் மறுபடியும் சாய்ந்துக்கொண்டாள் அபர்ணா. வீட்டில் இவளுக்கு பிடிக்காத வேலையை தொடர சொல்பவர்கள் யாரும் இல்லை. நாளை என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானமாக முடிவு செய்துக்கொண்டாள் அபர்ணா.
சில நிமிடங்கள் கடந்திருக்க விஷ்வா சாப்பிட்டு முடிக்க பரத் தங்கி இருந்த ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர் இருவரும். பழைய கதைகளை எல்லாம் பேசிக்கொண்டு விஷ்வா கட்டிலில் சாய்ந்த போது மெல்லக்கேட்டான் பரத்
'ஏன் விஷ்வா... யாருடா அது இந்துஜா???'
திடுக்கென எழுந்து அமர்ந்தான் விஷ்வா. 'உன்கிட்டே யார் என்ன சொன்னாங்க???'
அவனிடம் திடுக்கென ஏறிய பரபரப்பே ஏதோ இருக்கிறது என்று சொல்லியது பரத்துக்கு.
'என்கிட்டே யார் என்ன சொல்வாங்க??? நீ ஏதாவது சொன்னா தெரிஞ்சிக்கறேன்...' என்றான் தலையணையை மடியில் எடுத்து வைத்துகொண்டு அவனை பார்வையால் துழாவிய படியே.
'நீ தெரிஞ்சுக்குற அளவுக்கு ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல...' என்றபடியே மறுபடியும் படுத்துக்கொண்டான் விஷ்வா.
'இல்ல அவங்க ஒரு டான்சர் அப்படின்னு ஹாஸ்பிடல்லே பேசிட்டு இருந்தாங்க. அதான் கேட்டேன். ஆமாம். இந்த காலத்திலே சும்மா தையா தக்கா குதிக்கறவங்க எல்லாரும் டான்சர்ன்னு சொல்லிக்கறாங்க கொடுமையா இருக்கு ..' பரத் சொல்லி முடிக்கவில்லை.