(Reading time: 24 - 48 minutes)

வ கூட அப்ப “நான் ஹாஸ்டல் போய்டுறேன்ப்பா… நான்தான அவங்க கண்ண உறுத்துறேன்…” என கேட்டுப் பார்த்தாள்தான்…

ஆனால் “என்ன அனாதையாக்கிட்டு  போறேன்றியா நீ” என்று இவளை எதுவும் செய்ய முடியாமல் தடுத்துப்போட்டார் ஆனந்தப்பா…… ஆமாம் அக்கா மேரேஜ்க்கு பிறகு ஆனந்தப்பாவும் இவளும் ஒரு வீட்டில் இருப்பதாய் திட்டம்….

மாசி அண்ணா வீட்டு சம்மதம் இல்லாமலே பூர்வி மேரேஜ் முடிந்த சில நாட்களில் எதிர்பாராத விதமாய் தூக்கத்திலே ஆனந்தப்பா இறந்து போக…..

அப்போதும் ப்ரியாவை காப்பாத்தியது இந்த பழக்கம் தான்…

பிடிக்காதத நினைக்காத….Live in your present…

ஆனந்தப்பா சொல்லி கொடுத்தத……அவங்க விஷத்திலே யூஸ் செய்ததையும் விட கொடுமை….பூர்விக்கா  விஷயத்திலும் அதை இப்போ யூஸ் செய்துட்டு இருக்கிறதுதான்….

ஆனந்தப்பாக்கு பிறகு மாசி அண்ணாவும் பூர்வியும் பிடிவாதமா இவளை தங்களோடயே வச்சுகிட்டாங்க….

எனக்கு தங்கை இருந்தா வீட்டைவிட்டு அனுப்புவேனா….அப்டின்னா பூர்வி தங்கைய மட்டும் எப்டி தனியா விடுவேன்னு கேட்ட மாசி அண்ணாவும் பூர்வியும் இவள ஒரு கார் ஆக்சிடென்டில் நிரந்தரமா தனியா விட்டுட்டு போக……

இவளுக்கு திரும்பவும் ‘பிடிக்காதத நினைகாத ….live in your present..’ தான் உதவுகிறது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இதில் இந்த விவன்…. அவனை மட்டும் ஏன் எதையெல்லாமோ போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டுமாம்….

இந்த நிமிஷம் இவளை அவன் வருத்தல…. ஒழுக்கத்துக்கோ மனசாட்சிக்கோ மீறி எதையும் அவன் டிமாண்ட் செய்யவும் இல்ல…. மனசறிஞ்சு இவளும் இதுவரை எந்த தப்பும் செய்யல……..இவளுக்கு சுய நினைவு இல்லாதப்ப வந்துவிட்ட குழந்தைக்காய் இவ ஏன் கில்டியா ஃபீல் பண்ணனும்…? அதோட கன்சீவா இருக்கிறதை மறச்சும் இவ விவன மேரேஜ் செய்யலை……above all மேரேஜ் ஐடியா விவனோடது….

அப்றம் எதுக்கு இவள் மனசை போட்டு குடஞ்சு ரணமாக்கனும்??

Live in your present…..

உள்ளத்துள் உண்டாகும் அன்பின் வல்லமை இது…. பயஅடிமைதனத்தை அடித்து நொறுக்கி அங்கு ஒரு விடுதலையை அற்புதமாய் உண்டாக்கும்…..விவன் மீது உண்டான அன்பு அதைத்தான் அவளுக்குள்ளும் செய்து கொண்டிருந்தது……

ஆனால் இந்த காதல்???? அடுத்தாய் உண்டாகிறது அவளது இதயத்தில் இப்படி ஒரு கேள்வி….

விவன் உண்மையில் குற்றமற்றவனா இருந்து, இவளை அவன் முழு மனதாய் ஏற்றானானால் அது வாழும்….

ஒரு வேளை அவனுடைய இன்றைய செயல் எல்லாம் நடிப்பாய் இருந்து அவன்தான் குற்றவாளி என்று நிரூபணமானால் இந்த காதலெனும் மாய உணர்ச்சிவேகம் அதாகவே அழிந்தும் போகும்…..

இரண்டும் இல்லாமல் அவன் நிரபிராதியாய் இருந்து இவளை ஏற்க மறுத்தானானால்…. இவளுள் காதல் அப்படியே இருந்தும் போனால்… அம்மா அப்பால இருந்து ஆனந்தப்பா….பூர்விக்கா வரை எல்லோரையும் இழந்த பிறகும் வாழ முடியுற இவளால அப்பவும் வாழ முடியும்….

ஆக இந்த காதலைப் பற்றி எதிர்காலமே முடிவெடுக்கட்டும்….. அதுவரைக்கும் இவளாக இந்த காதல் அடிப்படையில் எந்த முடிவையும் எடுப்பதாய் இல்லை….

இப்போ Live in your present….

பாறைகளை உடைத்து வேர்விடும் வல்லமை அன்புக்கும் உண்டென்பதால், விவன் வகையில் இறுகி இருந்த அவள் மனதில், தனக்கான வழியை அழகாகவே உண்டாக்கிக் கொண்டது ரியாவின் காதல்….

இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்த பின் ப்ரியாவுக்குள் ஒரு பெரும் தெளிவு….. மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று இறங்கிப் போனது போலவும் ஒரு உணர்வு….. அன்பு சுகம்தான்.

ஆக இவளைப் பார்த்து முகம் மலர்ந்த விவனின் பார்வையை முகம் சுண்டாமல் நேருக்கு நேராக தாங்கியவள்…

“மின்னுக்கு இப்ப எப்டி இருக்கு….? ஆன்டிய வீட்ல ட்ராப் செய்துட்டீங்களா?” என அவளுக்கு தெரிய வேண்டியவைகளை விசாரித்தாள்.

விவனுக்கு இப்போது ரொம்பவுமே மகிழ்ச்சியாக இருந்தது…..

இவனைத் தேடி ரியா ஃபோன் செய்த விஷயம் ஆன்டி சொல்லி அவனுக்கு தெரியும்….அந்த டைம் அவன் டாக்டரிடம் பேசிக் கொண்டு இருந்ததால் ஆன்டி போய் பேசி இருந்தார்…

அவனைப் பொறுத்தவரை ரியா அவனை தேடாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்…. ஆனால் வழக்கப்படி அதுக்கடுத்து பொண்ணு மூஞ்ச தூக்கனுமே…. அப்படி எதுவும் இல்லாம சந்தோஷமா இருக்காளே…. மகிழ்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.