அந்த மரத்தில் இருந்த மற்ற குருவிகளுக் கெல்லாம் கடலம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
‘எங்களுக்கெல்லாம் கடலம்மாவைக் காட்டுவீர்களா? என்று அவை ஆவலோடு கேட்டன.
'உறுதியாக கடலம்மா மிக அன்புள்ளவள் நம் எல்லாரையும் ஒன்றாகப் பார்த்தால் மிக மகிழ்ச்சியடைவாள்' என்று அந்தச் சின்னச் சிட்டுக் குருவிகள் கூறின.
மறுநாளே அரச மரத்தில் இருந்தஎல்லாக் குருவிகளும் கடற்கரைக்குப் புறப்பட்டுச் சென்றன.
வான வீதியில் அவை கூட்டமாய்ப்பறந்து செல்வதைக் கண்ட-மற்ற மரங்களிலும், வீடு களிலும், குடியிருந்த சிட்டுக் குருவிகள் அனைத்தும் இவற்றைத் தொடர்ந்து பறந்தன.
குருவிகள் கூட்டமாகப் பறந்து செல்வதைக் கண்ட, காகங்களும், புறாக்களும், மைனாக்களும், மரங்கொத்திகளும் கூட்டம் கூட்டமாக அவற்றைப் பின்பற்றிப் பறந்து சென்றன.
பாரதிசாலை முழுவதும் வானவெளியில் ஒரே பறவைக் கூட்டங்களாகக் காட்சியளித்த்து.
அதைப் பார்த்து ஒரு சிறுவன்,
காக்கை குருவி எங்கள் சாதி-நல்ல
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்