(Reading time: 10 - 20 minutes)

  

காக்கை குருவி எங்கள் சாதி

  

என்று பாடினான்.

  

கடற்கரை முழுவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டும், கத்திக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தன. ஒரே திருவிழா மாதிரி இருந்தது.

  

எங்கே கடலம்மா?

  

எங்கே கடலம்மா? என்று எல்லாம் சேர்ந்து கேட்கத் தொடங்கின.

  

சாலை யோரத்தில் நின்ற சில சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் கூடி வந்த பறவைகளைக் கலைக்கும்படியான ஒரு செயல் செய்தார்கள்.

  

சாலை ஓரத்தில் கிடந்த கற்களை எடுத்துக் கூடிநின்ற பறவைகளின் மீது குறிபார்த்து அடித்தார்கள். இதனால் பல பறவைகள் காயப்பட்டன.

  

சிறுவர்கள் மேலும் மேலும் கற்களைப் பொறுக்கி யடித்தார்கள். மகிழ்ச்சியாகக் கூடி யிருந்த பறவைக் கூட்டத்தின் இடையில் வேதனையும் துன்பமும் பரவியது. சில காகங்கள் அந்தச் சிறுவர்களைக் கொத்துவதற் காகச் சாலை நோக்கிப் பறந்தன.

  

இதற்கிடையே சின்னச்சிட்டுக்கள் இரண்டும் 'அம்மா கடலம்மா' என்று கத்தின.

  

இந்தக் குரல் கேட்டவுடனே, கடலம்மா அவற்றின் கண்முன்னே தோன்றினாள். வானத்தில் அழகாக இறக்கை விரித்துப் பறந் தாள். ஒவ்வொரு பறவைக் கூட்டத்தையும் பார்த்து வாழ்த்து மொழிகளைக் கூறினாள். மேலே அங்கும் இங்கும் பறந்து கொண்டே இரண்டு கைகளாலும் நவதானிய மணிகளை எங்கும் கொட்டினாள்.

  

பறவைக் கூட்டங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.