(Reading time: 10 - 20 minutes)

முடியாது.

  

எல்லாப் பறவைகளும் கடலம்மாவை வணங்கின. அவள் போட்ட தானிய மணி களைத் தேடிப் பொறுக்கித் தின்றன. மகிழ்ச்சியுடன் அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்த்தன. கடலம்மா எல்லாப் பறவைகளை யும் வாழ்த்தினாள். சிறுவர்களை நோக்கிப் பறந்தாள்.

  

'சிறுவர்களே, காக்கை குருவியெல்லாம் உங்கள் அன்புக்குரிய பறவைகள். அவைகளை நீங்கள் ஆதரித்து வளர்க்க வேண்டும். கல்லால் அடிப்பதோ, தொல்லை கொடுப்பதோ கூடாது. அவற்றோடு சேர்ந்து விளையாடலாம். துன்புறுத்தக் கூடாது. உலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க இதுவே வழி’ என்று கடலம்மா கூறினாள்.

  

உடனே சிறுவர்கள் ’தெரியாமல் செய்து விட்டோம் தாயே. மன்னிக்க வேண்டும். இனிமேல் எல்லாரிடமும்அன்பாக இருப்போம்’ என்று கூறினார்கள்.

  

கடலம்மா ஒவ்வொரு சிறுவனுக்கும் முத்தம் கொடுத்தாள்.

  

பறவைக் கூட்டங்களுக்கெல்லாம்,என்றும் பசியில்லாத அளவு நிறைய தானிய மணிகள் கிடைக்குமாறு அருள் மொழி கூறினாள்.

  

அரசமரத்துச் சிட்டுக்களைத் தன் கையில் தூக்கி வைத்துக் கொண்டு அன்பு முத்தம் கொடுத்தாள்.

  

மீண்டும் ஒரு முறை எல்லாப் பறவை களுக்கும் வாழ்த்துக் கூறி விட்டுக் கடலம்மா மறைந்து விட்டாள்.

  

பறவைக் குலங்கள் எல்லாம் கடலம்மாவின் அருளை வியந்து மகிழ்ந்தன.

  

அரசமரத்துச் சிட்டுக்குருவிகள்,கடலம்மா வின் செல்லச் சிட்டுக்களாக இருந்ததால், எல்லாப் பறவைகளும் அவற்றிடம் மிகுந்த அன்பு பாராடடின.

  

------------

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.