சாப்பிடுவதற்கு முன்பு இரத்த குளுக்கோஸ் அளவை எடுத்துக் கொள்வது ஒரு அடிப்படை எண்ணை வழங்குகிறது. இது பகலில் உடலின் குளுக்கோஸ் செயல்முறைகள் பற்றிய தடயங்களை வழங்குகிறது.
உணவுக்கு முன்:
உணவுக்கு முன் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் அதிக இரத்த குளுக்கோஸ் வாசிப்பு சர்க்கரையை நிர்வகிப்பதில் உடலில் இருக்கும் சிரமங்களைக் குறிக்கிறது.
உணவுக்குப் பிறகு:
உணவுக்குப் பிந்தைய சோதனை, உடல் உணவுக்கு எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பதையும், சர்க்கரை செல்களை நல்லபடியாக சென்று அடைகிறதா என்பதையும் பற்றி நமக்கு சொல்கிறது.
பெரும்பாலான மருத்துவர்கள் உணவுக்கு 2 மணி நேரம் கழித்து இந்த பரிசோதனையை செய்ய பரிந்துரைக்கின்றனர்.
சர்க்கரை அளவுகள்:
பரிசோதனைக்கு பிறகு சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு சோதனையின் நார்மல் அளவையும் தெரிந்துக் கொள்வது அவசியம். இதை உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
பொதுவாக, பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் அளவீடுகள் இது:
காலை உணவிற்கு முன்:
70 – 100 – நார்மல் அளவு
உணவுக்கு முன்:
70 – 130 – நார்மல் அளவு
உணவிற்கு பிறகு:
140 க்கு கீழே – நார்மல் அளவு
நாம் இருக்கும் சூழலை அனுசரித்துக் கொண்டே ஆரோக்கியமாக வாழ்வதும் அவசியம். எனவே தேவைப்படும் போது உங்களுக்கு நீங்களே சர்க்கரை பரிசோதனை செய்துக் கொள்ள மறக்காதீர்கள்.