Page 3 of 3
நண்பர்கள் குறுக்கே வந்ததால் ஓடி விட்டேன். அந்த நிலை வர்ணிக்க முடியாதது! ஒரே குழப்பமானது! மட்டமானது! பானு இறந்துவிட்டாள். மகனை விட்டுவிட்டு இறந்துவிட்டாள். அவன் பொறுப்பு என்னுடையது. என்னுடையது.
பாபு மடியில் தூங்கிக்கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க துக்கம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. கண்ணீர் வழிந்து பாபுவின் கன்னங்களில் விழுகிறது. தலை குனிந்து ஈரத்தைத் துடைக்கிறேன். இரயில் வண்டி வாயு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இரயில் வண்டிக்கு எதிராக என் மனம் பின்னோக்கி.......
தொடரும்