(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், "அத்தான்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?" என்று கேட்டாள்.

"வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸரஸ்" என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.

கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தானுக்கு ஏற்பட்டுவிட்டதே' என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினாள். ஒருவேளை அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான அவள் மனம் 'திக்'கென்று அடித்துக்கொண்டது.

--------------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.