நான் கூற வந்ததைத் தெளிவாக்கி விட்டீர்கள்!' என்று கூறி வியந்தாள்.
அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தெல்லாம், அந்த உவமையைக் கேட்ட வியப்பில் அடிப்பட்டுப் போய் விட்டன. அவரை நேரில் காணும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தெல்லாம், இப்போது பேசத் தகுதியற்ற விஷயங்களாகி விட்டன. அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கிறார்!
பாரதி காப்பி கொண்டு வந்து வைத்தாள். காப்பியை அருந்தியபடியே "தாங்கள் தினமும் இங்கு வரப்போவ தாகச் சொன்னீர்கள் அல்லவா?'' என்று கேட்டார் சேதுபதி.
"ஆமாம்'' என்றாள் பார்வதி.
"அவசியம் வந்து போய்க் கொண்டிருங்கள். நேரம் கிடைக்கும் நாட்களில் நானும் வந்துவிடுகிறேன். பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது'' என்றார் சேதுபதி.
பார்வதி தலையைக் குனிந்து கொண்டாள். அது அடக்கத்தின் அறிகுறியா? வெட்கத்தின் விளைவா?
வாசலில் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்டது. "பாரதி, யார் என்று பார்த்துவிட்டு வா'' என்றார் சேதுபதி.
பாரதி வெளியே போய்ப் பார்த்தாள். ராஜா வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் பாரதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. 'ராஜா இப்போது எதற்காக இங்கே வருகிறார்? அவருடன் ஏதேதோ பேச வேண்டுமெனத் துடித் துக் கொண்டிருந்தாள், பாரதி. ஆனால் அப்பாவும் பிரின்ஸி பாலும் இருக்கும்போது எப்படிப் பேசுவது?'
"எங்கே வந்தீர்கள் ராஜா?"
அவளுக்கு ராஜா பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவும் பிரின்ஸிபாலுமே வாசலுக்கு வந்து விட்டார்கள்.
"அத்தை! எங்கள் கல்லூரி பிரின்ஸிபால் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா! இன்று நம் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்" என்றான் ராஜா.
"அப்படியா? இதோ வருகிறேன்'' என்று ராஜாவுக்குப் பதில் கூறிய பார்வதி, சேதுபதியிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.
சேதுபதிக்கும் பார்வதிக்கும் இன்னும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்