முதல் தடவை.
மாடியில் போய்ப் படுத்தவள் தான். மாலை ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. கடுமையாகக் காற்று வீசிக்கொண்டிருக்கவே, அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந் தாள். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.
சேதுபதி தன்னைக் காண வந்திருப்பது போல் ஒரு பிரமை. அவரை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந் தது. 'அவரை இனி நான் சந்திக்கவே மாட்டேன். சந்திப்பதால் என் உள்ளத்தில் வளரக்கூடிய எண்ணத்துக்கு இனி இடம் தரமாட்டேன்' என்று எண்ணுகிறாள்.
"அத்தை ! அத்தை !'' என்று அவசர அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிவரும் ராஜாவின் பூட்ஸ் ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ராஜாவின் முகத்தைப் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. ராஜாவின் கைகள் தன் நெற்றியைத் தொடுவதை உணர்ந்த பார்வதி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
''என்ன அத்தை! நல்ல ஜூரம் அடிக்கிறதே! உங்களுக்கு என்ன உடம்பு!... " பதறிப்போன ராஜா, கீழே ஓடிச்சென்று தர்மாமீட்டரைக் கொண்டுவந்து பரிசோதித்தான்.
"101 டிகிரி'' என்று அறிந்தபோது, ராஜாவின் கண்கள் கலங்கின.
"ஒன்றுமில்லை ராஜா! இன்றிரவு பட்டினி போட்டால் நாளைக்குச் சரியாகிவிடும்'' என்று பார்வதி ஈன சுரத்தில் கூறினாள்.
"நீ சாப்பிடவில்லை யென்றால், நானும் சாப்பிடப் போவதில்லை. நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன்'' என்று கூறிப் புறப்பட்ட ராஜா, சற்று நேரத்துக் கெல்லாம் டாக்டருடன் திரும்பி வந்தான்.
பார்வதியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பாலம்மாள் சிரித்துக்கொண்டே, "நான் டாக்டர் தொழிலை மேற்கொண்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இதுவரை உங்களுக்குத் தலைவலி என்று கூடக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குச் சிகிச்சை செய்ய இப்போதாவது எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே!'' என்றாள்.
"அப்படியானால் எனக்கு ஜூரம் வந்தது பற்றித் தாங்கள் ரொம்ப சந்தோஷப்-படுகிறீர்கள், இல்லையா?" என்று கேட்டாள் பார்வதி ; பாலம்மாள் சிரித்தாள்.
''பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை. சாதாரண ஆரம்தான். நான் மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். சாப்பிடுங்கள். நாளைக்கு ஜூரமே இருக்காது. ஆனால் ஓய்வு ரொம்ப முக்கியம்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.
"சாப்பிடலாமா?" என்று கேட்டான் ராஜா.
"ஓ" என்றாள் டாக்டர்.
"பார்த்தீர்களா அத்தை! டாக்டரே சாப்பிடச் சொல்லி விட்டார்' என்றான் ராஜா.