(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

ஓஹோ! அப்படியா? சந்தோஷம் அப்பா. உன் அம்மா இருக்கிற வரைக்கும் தான் நீ எதிலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாய். வகையாகக் கண்ணியமாக என் பிள்ளை இருக்கப்போகிறானா?' என்று அவள் என்னிடம் சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தாள். இனிமேலாவது ஒழுங்காக இருந்தாயானால் சரி' என்று கூறிவிட்டுக் கல்யாணராமன் வீட்டுக்குப் போக எழுந்தார்.

  

மூர்த்தியின் முகம் வாட்டமடைந்தது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் எதிரில் மாமா சட்டென்று தன் பூர்வ காலத்தைப் பற்றிப் பேசிக் கௌரவத்தைக் குலைத்தது மூர்த்திக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பவானியை அவன் ஒரு மாதிரியாகப் பாத்து கொண்டே, பார்வதியிடம், "என்ன மாமி! பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என்று குடி வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது. வேண்டியது தானே?" என்று கேட்டான்.

  

"ஆமாண்டா அப்பா! வயசானவளாக இருந்தாலும் என்னைப்போல ஒண்டிக்கட்டையாக எனக்கு இருக்கப் பிடிக்காதுடா. நீ தான் உன்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு இந்த மாசியோடு முப்பத்தி ஒன்று வயசு ஆகிவிட்டதே. காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால்

  

மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகியிருப்பாய். பிரமசாரிக் கட்டையாய் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டு, நீயும் உன் போக்கும்! ஹும்... எழுந்திருந்து பெங்கள் வீட்டுக்கு வா. குளித்துச் சாப்பிடலாம்" என்று பார்வதி மேலும் அவனைப் பேச விடாமல் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

  

பவானிக்கு எல்லாம் ஒரே வியப்பாக இருந்தது. சம்பாதிக்கும் ஒரு கண்ணியமான யுவன், ஏன் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்? மூர்த்திக்கு என்ன அழசில் குறைவா? படிப்பில் குறைந்தவனாகவும் தோன்றவில்லை.

  

பவானியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் மதித்தது . யார் எப்படி வேண்டு-மானாலும் இருக்கட்டும். அவன் இங்கு வருவதற்கோ , தன்னுடன் பேசுவதற்கோ எந்த விதமான சந்தர்ப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு அவசியமும் இல்லை .

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.