தோற்றத்தையும் உடைய அவள் உள்ளம் கற்பாறையைவிடக் கடினம் வாய்ந்தது. அங்கே கருணைக்கும், அன்புக்கும் தான் இடம் உண்டு. ஆனால் சுய கௌரவத்துக்கு இழுக்கோ அவமானமோ ஏற்பட அந்த மனம் இடங் கொடுக்காது என்பதை மூர்த்தி அறிய வில்லை.
சற்றும் எதிர்பாராத விதமாகப் பவானி, பள்ளிக் நடத்துக்கு வெளியே நின்றிருந்த பஸ்ஸைப் பார்த்தாள். தற்செயலாக அவள் பார்வை மூர்த்தியின் மேல் சென்றது. சோகமும் கருணையும் ததும்பும் அவள் கண்கள் ஒரு வினாடி நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்தன. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டுப் பவானி முகத்தை வேறுபுறம் இருப்பிக் கொண்டாள்.
மூர்த்தி புன்முறுவல் பூத்தான். அவளுடைய அலட்சியத்தையும் வெறுப்பையும் பார்த்துத் தனக்குள் நகைத்துக் கொண்டான்.
கண்டக்டர் விசில் கொடுக்கவும் பஸ் இடத்தை விட்டு நகர்ந்தது.
--------------
தொடரும்