Page 5 of 5
திருப்திக்காகச் சொல்லி வைக்கிறேன். என்றைக்காவது நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று தீர்மானித்தால் கோவர்த்தனன் போன்ற ஒருவரைத்தான் மணந்து கொள்வேன். சரிதானா?"
"ஊஹூம், எனக்குப் புரியவில்லை, பவானி!" என்றார் குணசேகரன். "கோவர்த்தனனே 'இதோ நான் தயார்' என்னும்போது கோவர்த்தனன் போன்ற வேறு ஒருவரைத் தேடுவானேன்?"
"அதைப் பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை, மாமா! அது இன்னொருவர் ரகசியம்!" என்றாள் பவானி.
----------------
தொடரும்...