(Reading time: 6 - 12 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

என்றார் கோவர்த்தனன்.

  

"எஸ், ஐ வில் ஹெல்ப் மை ஸெல்ஃப்" என்று கல்யாணம் தனது டிரிங்கைத் தானே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் வெளிப்பட்டன. சாவிக்கொத்திலிருந்த பேனாக் கத்தியால் ஒரு பழத்தை வெட்டிச் சாறு பிழிந்தான், இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுச் சோடாவைக் கலந்தான். லெமனேடைக் கரத்தில் ஏந்தி "சீர்ஸ்" என்றான்

  

கோவர்த்தனன் அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு "சீர்ஸ்" என்று கூறி விஸ்கியை விழுங்கினார்.

  

"பவானிக்கு விடுதலை கிடைக்கச் செய்து விட்டீர்களாமே, எப்படி ஸார் அதைச் சாதித்தீர்கள்? நீங்கள் விருமபியபடி அவள் வாக்குமூலம் எழுதிக் கொடுத்து விட்டாளா?"

  

" அவள் தரவில்லை, அதனால் என்ன? உமாகாந்தனே எழுதிக் கொடுத்துவிட்டான். அது போதாதா?"

  

"பேஷாகப்போதும். இப்போது உமாகாந்தன் நிலை என்ன?"

  

" பழைய பாக்கி இரண்டு வருஷங்கள். இப்போ தப்பி ஓடிய குற்றத்துக்காக மேலும் மூன்று வருஷங்கள்....."

  

" ஆக மொத்தம் ஐந்து வருஷங்கள்."

  

" அவசரப்படாதே, அப்பா! அவனைப் போலீஸார் பிடித்துச் சோதித்தபோது அவனிடம் நேதாஜியின் இயக்கம் பற்றிய பிரசாரப் பிரசுரங்கள் பல இருந்தன. நேதாஜியின் படங்களையும் ஏராளமாய் வைத்திருந்தாள்.

  

அவற்றை ரகசியமாக விநியோகிக்க எண்ணியிருக்கிறான். ராஜத்துவேஷக் குறச்சாட்டும் சேர்ந்துகொள்கிறது."

  

"அதற்கு மேலும் இரண்டு வருஷங்கள் தீட்டிவிட வேண்டியதுதானே! ஏழு வருஷங்களுக்குக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.