(Reading time: 5 - 10 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

"அட, போட்டுக் கொள்கிற வேளையில் போட்டுக் கொள்ளேன். மேலே மூவாயிரம் கிடைத்தால் நமக்குத் தானே லாபம்! விற்கிறவருக்கு ரொம்பப் பணமுடையாம்."

  

கோமதிக்கு இந்த வியாபாரப் பேச்சே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, பவானி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள். பளபள வென்று மின்னும் வைர 'நெக்லெஸை' எடுத்துக் கொண்டு நாகராஜன் மாடிக்கு வந்தான். கோமதி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தாள்.

  

அதற்கப்புறம் நாகராஜன் அந்த நகையை வாங்கினானா என்பதை கோமதியும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் கூறவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டான்.

  

மாடியில் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போன கோமதி கீழே இறங்கி வந்து டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு போன்' செய்து, "ராதா இருக்கிறாளா?" என்று விசாரித்தாள். ”அவள் வெளியே போயிருக்கிறாள். கச்சேரிக்கு" என்று சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன், * நீங்கள் சௌக்கியந்தானே அம்மா?" என்றும் விசாரித்தார் அவர்.

  

"உம்... சௌக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லை " என்று அலுப்புடன் கோமதி சொல்லிக் கொண்டே ’ரிஸீவரை' போனில் வைத்தாள்.

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.