பின்னல் போடாமல் முதுகில் புரள விட்டுக் கொண்டு அவள் அங்கு நின்ற காட்சி அழகாக இருந்தது.
ராமையா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராதாவின் குரல் கேட்டு சுவாமிநாதன் வெளியே வந்தார்.
"ராமையா! அம்மா கூப்பிடறாங்க பார். எழுந்திரு' ' என்று அவனை எழுப்பினார்.
”யார் இந்த வழுக்கைத் தலை ஆசாமி?" என்று யோசித்தான் மூர்த்தி. நெற்றியில் பளிச்சிட்ட திரு நீறும் அவருடைய வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் அவ ருக்கு எந்த விதமான உருவமும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அவர் டாக்டராக இருக்கமுடியாது என்று தீர்மானித்தான் அவன். ராதாவின் தந்தையாக இருக்கலாம் என்று தோன்றியது. ’யாருமில்லாத ஒரு பங்களாவுக்குள் இந்த மோகினி இருந்தால், அவளை அடைவது எவ்வளவு சுலபம்? இப்படிக் காவல்காரனும், வழுக்கைத் தலையருமாக ஒருவர் மாற்றி ஒருவர் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று மூர்த்தி நினைத்துக் கொண்டே ராதாவின் வீட்டைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் மெதுவாக ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.
--------------
தொடரும்...