(Reading time: 4 - 8 minutes)
Muthu Sippi
Muthu Sippi

தெரியும். ரொம்பப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்திருக்கிறான். இவனை அவர்கள் மதிக்கமாட்டார்கள் என் பது எனக்குத் தெரியும்." பெண்களின் சுபாவப்படி பார்வதி சம்பந்தி வீட்டார் மீது குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தாள்.

  

கொஞ்சம் பேசாமல் இரு. தனக்கு இருக்கும் கஷ்ட சுகங்களைப் பிறரிடம் சொல்லி அதை நீக்கிக் கொள்ள அவன் முனைந்திருக்க மாட்டான். டாக்டருக்கே இதைப்பற்றித் தெரிந்திருக்காது. தெரிந்திருந் தால் கூடப் பிறந்தவளுக்காகவாவது அவர் ஏதாவது செய்திருக்க மாட்டாரா? விட்டுக் கொடுப்பாரா?"

  

"ஆமாம் தாயும் தகப்பனும் இருக்கிற மாதிரி வருமா இதெல்லாம்?" என்று சலித்தவாறு பேசினாள் பார்வதி. அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் பலனில்லை என்று தெரிந்த கல்யாணம் தாமே விவரங்களை அறிந்து வர ராமுவைத் தேடிப் போனார்.

  

ராமு கூறியவற்றைக் கேட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் அவர் அன்றே தபாலில் ஸ்ரீதரனுக்கு இதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினார்.

   

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

  • :Q: radha sollamal vitta vishayathai ivar thabal moolam therivikkirare facepalm eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.