(Reading time: 8 - 15 minutes)
Vata malli
Vata malli

  

அய்யோ... இங்க வந்து பாருங்களேன்” என்று சத்தம் போடப்போன அம்மாவின் வாயை மரகதம் கைகளால் பொத்தினாள். அப்போதும், அவள் பேசினாள். இதனால் தாய்க்காரியிடமிருந்து விதவிதமான - விநோதமான சத்தம் ஏற்பட்டது. எப்படியோ, மகளிடமிருந்து விடுபட்டும் விடுவித்துக் கொண்டும், மகள் மெல்லப் பேசு என்று சைகை செய்த கையைத் தட்டிவிட்டபடியே அதற்கு எதிர்மாறான குரலில் பேசித் தீர்த்தாள்.

  

ஒப்பன் புத்திதான ஒனக்கு இருக்கும்... எதுக்காக மெள்ளப் பேசணும்னே. இது ஊரு முழுக்க தெரிய வேண்டிய விஷயம்... எல்லாம் அந்த எரவாளி பய மகள் சீதாலட்சுமியோட வேல. இவங்கிட்டயும் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். உச்சி காலத்துல அவள் சமாதிப் பக்கம் போகாதடா போகாதடான்னேன்... பாவிப் பய கேக்காம இப்ப வட்டியும் முதலுமா வாங்கிட்டு வந்துட்டான்...”

  

அந்தப் பாவப்பட்ட அக்காவை ஏம்மா வம்புக்கு இழுக்கே... பாவிமகள் சொல்லாம கொள்ளாம துள்ளத் துடிக்க செத்தவள்...”

  

உனக்கு என்னடி தெரியும்... அப்படி சாகறவங்கதான் பேயா அலைவாவ... போன வருஷம் இறந்ததுலருந்து அந்த சீதாலட்சுமி கருவக் காட்டுல லாந்துனாள்... நானே ஒரு தடவ அவளப் பார்த்தேன். ஊர்லயும் சொன்னாவ... ஆனா இப்போ அப்படி அவ லாந்துரது இல்ல. ஏன் தெரியுமா? அவள்தான், இவனைப் பிடிச்சுக்கிட்டு இவன் கூடயே காலேஜுக்குப் போறாளே... அப்புறம் அங்க இருக்க முடியாம இவன இங்க கூட்டிக்கிட்டு வந்துடுறாளே... நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் இவன வாய்க்குவாய் தம்பி... தம்பின்னு சொன்ன... மூதேவி... இப்ப அவனையே ‘தங்கச்சி... தங்கச்சி’ன்னு சொல்ல வச்சுட்டாள்...”

  

இவன் அப்படி சொன்னான்னு உனக்கு எப்படிம்மா தெரியும்...”

  

எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்... பூவம்மா மயினிகிட்ட சொல்லி திருநீர் போட்டா சரியாயிடும்... ஏல சுயம்பு வந்ததே வந்திய... உன் அண்ணன் பிள்ளைகளுக்கு, ஏதாவது இனிப்பு கினிப்பு வாங்கிட்டு வரப்படாதா...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.