அவன் நெளிந்து கொண்டே சிரித்தான்.
ஒண்ணும் தெரியாதாக்கும்” என்றான். "உக்கும்... பாலுவும், பூரணியும் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள்.
நர்மதா வெட்கத்தால் சிவந்துபோனாள்.
அன்று இரவு எல்லா இரவுகளையும்போல் அல்லாமல் புது மையாக இருந்தது. நிலவு, மலர்கள், சந்தணம் என்று மனசுக்குப் போதையை ஊட்டும் எல்லாமே அந்த அறையில் இருந்தன. ஜன்னல் பக்கமாக வைத்திருந்த கண்ணாடியில் பிறைச்சந்திரன் தெரிந்தது.
அவள் வெகுநேரம் நின்றிருந்தாள். பட்டப்பா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். பாலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பூரணிதான் காலையிலிருந்து "முதலில் பாலைத் தரவேண்டும்" என்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே.
பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டான் அவன்.
ஒரு வேளை உடம்பு சரியில்லையோ? "
"உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா" என்று அவன் நெற்றியில் கை வைத்துப்பார்த்தாள் அவள். அந்த ஸ்பரிசம் கொஞ்சமும் அவன் உடலிலோ, உள்ளத்திலோ சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை.
நர்மதா அலுப்புடன் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அடுத்த வீட்டு மாடியைப் பார்த்தாள். திறந்த மாடியில் பூரணியும், பாலுவும் உட்கார்ந்திருந்தார்கள். பாலுவின் மடியில் அவள் படுத்துக்கிடந்தாள். அந்த நெருக்கம் தரும் சுகத்தில் அவன் மயங்கிக்கிடந்தான்.
"சே! என்ன வந்தது இந்த மனுஷனுக்கு?”