(Reading time: 6 - 11 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

அவன் திரும்பிப் பார்த்தபோது, நர்மதாவும் அவனைப் பார்த்தாள். இருவர் பார்வைகளும் மோதின. அவன் தன் பூனைக் கண்களால் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

  

"சரிதான், கல்யாணத்தன்றே அவள் "உன் ஆத்துக்காரருக்குப் பூனைக்கண்ணுடி, ராத்திரியிலே பார்த்து பயந்துக்கப் போறே.. நீ பார்க்கலைன்னு கேட்டது சரியாகத்தான் இருக்கு. இனிமே கண்களை மாத்தமுடியுமா? எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அன்பர் இருந்தாச்சரி."

  

அவள் சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பால் கிண்ணத்தை அவனிடம் கொடுத்தபடி, "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச் சிருக்கு. பெரிசா, அழகாருக்கு. ஒண்டுக் குடித்தனத்துலே இருந்து அலுத்துப்போச்சு" என்று பேச ஆரம்பித்தாள்.

  

அவள் அவனிடம் எதிர்பார்ப்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அலுத்துப்போனவளாக “மணி ரொம்ப இருக்குமே... என்று அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள்.

  

அப்போது பட்டப்பா. கண்களில் நீர் ததும்ப அவளை இரக்கத்துடன் பார்த்தான்.

  

அவளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதான்.

  

"நர்மதா! நீ ஏமாந்துட்டே. எனக்கிருக்கிற பலஹீ னத்தைப்பத்தி உங்கிட்ட சொல்லவே வெக்கமா இருக்கு. பணத்தைப்பாத்து மயங்கி உங்கம்மா உன்னை என் கழுத்தில் சுட்டிட்டாங்க. நீ எங்கேயோ எப்படியோ வாழவேண்டியவ. தைக் காலையிலே எடுத்துப்போய் படி. ராத்திரி ராத்திரி இந்த அறைக்குள்ளே பல ஆசைகளோட வராதே.'

  

அவள் முன்பாகக் கிடந்த அந்தக் கடிதத்தை அவள் வெறுப்புடன் பார்த்தாள். கணவனும், மனைவியும் முதன் முதலில் சந்திக்கும்போது கடிதம்என்ன வேண்டிக்கிடக்கி கிறது?

  

மறுபடியும் அவள் அடுத்த வீட்டு மாடியைப்பார்த்தாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.