Page 5 of 5
பூரணியும், பாலுவும் அறையில் மங்கிய ஒளியில் படுத்திருப்பது தெரிந்தது. எத்தனை நெருக்கம்? முடிவற்ற குழப்பமான சிந்தனைகள் அவளை வாட்டி எடுத்தன. என்ன கடிதமாக இருக்கும்? ஒரு வேளை அவன் யாரையாவது காதலித்து இருக்கலாம்.
நீண்டு கொண்டே வந்த இரவு எப்போது தொலைந்தது என்பது தெரியாமல் அவள் தூங்கிவிட்டாள். விழித்தபோது பட்டப்பா அறையில் இல்லை.
முதல்நாள் ஸ்வப்பனபுரியாகக் காட்சிதந்த வீடு இன்று அவள் வரைக்கும் வெறுமையாக இருந்தது.
----------
தொடரும்...