(Reading time: 9 - 18 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

  

பெண் குருவியே ரொம்பதுணிச்சலாக நடந்து கொண்டது. அதுவே வலுவில் போய் ஆண் குருவியைச் சீண்டியது. பிறகு இரண்டும் பறந்து போயின.

  

நர்மதா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

  

அன்புள்ள நர்மதா,

  

உன்னைப் பார்க்கும்போது மனசில் ஏற்படுகிற பரவசம் அப்படியே தேங்கித் தடைபோட்டதுபோல் நின்றுவிடுகிறது. பிறவியிலேயே ஆண்மையற்ற என்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆசைகளைத் தேக்கி வைத்திருக்கும் உன்னை, கோழையாக்கி ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உனக்கு விருப்பமில்லாவிட்டால் என்னை விட்டுப்போய்விடு.

  

பட்டப்பா

  

நர்மதா சிலையாக நிள்றாள். மரமாகிப்போனாள். கண்கள் வரண்டு போயின ஆண்மையற்றவன்... ஏன்தான் இந்த ஆண்கள் எதிலுமே இப்படி மெத்தனமாக இருக்கிறார்களோ? பெண்களை குரூரமாக வதைக்கிறார்களோ?

  

இனிமேல் என்ன செய்யவேண்டும்? புருஷன் உதவாக்கரை என்று இரைந்து சொல்லிக்கொண்டு வாசல்லே இறங்கி நடந்துவிட முடியுமர்? சமையல்காரியின் பெண்ணாகிய தனக்கு கோர்ட்டும், கொத்தளமும் ஏற முடியுமா? இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்?

  

"நர்மதா! பூரணி வந்திருக்கா பார். குளிச்சாச்சோ இல்லையோ?" என்று கங்கம்மா குரல் கொடுத்தாள்.

  

அன்று அவள் அவசரமாகக் குளித்தாள். சோப்பு தேய்த் துக்கொள்ளவில்லை. வாசனை என்ன வேண்டிக்கிடக்கு?

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.