(Reading time: 9 - 18 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

புடவையை அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளை பட்டப்பா ஆவலுடன் பார்த்தான், மனைவி என் கிற முறையில் அவளை சுவாதினமாகப் பார்த்துச் சுவைக்க அவன் காத்திருப்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

  

பூரணி வழக்கம்போல பூச்சரம் கொண்டு வந்திருந்தாள்.

  

குளியல் என்ன வெண்ணீரிலேயா, பச்சைத்தண்ணியா?'

  

"நெருப்பிலே'

  

"சீ பைத்தியம்! உளர்றியே'

  

"ஆமாம் இப்படி உள்ளே வாங்க"

  

இருவரும் உள்ளே போனார்கள்.

  

"ராத்திரி ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தாப்பலே இருக்கே"

  

"நீ பார்த்தியா என்ன? எங்களையா கவனிச்சிண்டு இருந்தே" என்று கேட்டாள் பூரணி.

  

ஆமாம்... மத்தவங்களை கவனிச்சுதானே ஆகணும்? இங்கதான் ஒண்ணும் இல்லியே"

  

"என்னடி சொல்றே"

  

நர்மதா மிக ரகசியமாகப் பட்டப்பாவின் அலட்சியத் தைப்பற்றி கூறினாள்.

  

"போடி- மொதல்லே சில ஆண்கள் வெட்கப்படற மாதிரி இருக்கும். நீதான் சரிகட்டணும். மெதுவாக கிட்ட நெருங்கி உம் புருஷனைத் தொட்டுப்பாரு.."

  

''அவரே என்னைத்தொட்டு அணைச்சுக்கிட்டாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.