"அப்புறம்?"
"அப்புறம் ஒண்ணுமில்லே. உங்க வீட்டு மாடியைப் பார்த்து உட்காந்து இருந்தேன். அவர் தூங்கிட்டார். நீங்களும், உங்க அவரும் கட்டில்லே ரொம்ப நெருக்கமா...
சீ சீ, மறந்துபோய் ஜன்னலை சாத்தாம இருந்துட்டேன் போல இருக்கு. ராத்திரி முழிப்பு வரும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் எனக்கு. பட்டப்பா ஒருமாதிரிபையன் ஆச்சே. பொம்பளை மாதிரி இருப்பானே...ன்னு நெனச்சுகிட்டேன் என்றாள் பூரணி.
என்ன காரணமேர் நர்மதா பூரணியிடம் பட்டப்பா கொடுத்த கடிதத்தைக்காட்டவில்லை. ஒரு மனுஷன் ஆண் மையற்றவனாக இருப்பதுபற்றி அவள் நடுத்தெருவில் நின்று கூச்சல்போட முடியுமா? வீட்டுக்குள்ளேதான் இரைந்து கத்தி ரகளை பண்ணமுடியுமா?
கடவுளே! இப்படியும் நடக்குமா? எங்கேயோ யாத்திரை போய்விட்டு வந்த அம்மா வரனைத் தேடிப் பிடித்துக்கொண் வந்தாள்.
அவளுக்கு அந்த சாயிராமின் பேரில் சந்தேகம். இவளைச் சுற்றி சுற்றி வருகிறானே. என்னிக்காவது தன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இவளை இழுத்துக்கொண்டு நாலு மாசம் வைத்திருந்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விடுவானே என்று அம்மா மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருந்தாள். வறுமைச் சேற்றில் மலர்ந்த தாமரைப் சாப்பிட்டே பளபளவென்று வளர்ந்து போல பழையது நின்றாள் நர்மதா.
கங்கம்மா இரட்டை வடம் சங்கிலியும், நாலு வளையல் களும், முத்துத்தோடும் எடுத்து வந்து நிச்சயதார்த்தம் நடத் தினாள். வெங்குலட்சுமி நகைகளின் மதிப்பில் மயங்கிப்போ யிருந்தாள். எப்படியாவது சாயிராமின் பார்வையிலிருந்து தப்பி நர்மதா கல்யாணமாகிப் போனால் போதும் என்கிற நிலை.
முதலில் அம்மாவின் பேரில் வந்த ஆத்திரம் படிப்படியா கத்தணிந்தது.
----------
தொடரும்...