(Reading time: 12 - 24 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

"அடக் கடவுளே! பேசாமல் போலீஸ்லே ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்போமா?"

   

"எந்த முகத்தோட இன்ஸ்பெக்டரைப் பாக்கிறது?"

   

"அப்போ டெபுடி கமிஷனர் அங்கிளைப் பார்த்து துப்பாக்கி லைசன்ஸ் கேட்போமா?"

   

"அதுகிடைக்கிறதுக்கு முன்னாடியே என்னைத் தீர்த்துடுவாங்க"

   

“அப்போ என்னதான் செய்யறது?"

   

“அதுதான் எனக்கும் புரியவில்லை."

   

“அப்படியே அவுங்க வெட்டுறதா இருந்தால், நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வெட்டணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாது. ஆமா முடியாது தான். நெசமாத்தான். சத்தியமாத்தான்."

   

பாமாவால், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தாரின் கவனத்தை அவள் அழுகை கவரப் போவதுபோல் இருந்தது. ஆகையால், இளங்கோ அவர்களின் கண்களில் பாமாவின் முகம் படாதபடி அட்ஜஸ்ட் செய்து நின்றான். அவளை அதிசயத்துப் பார்த்தான். எழுபது வயதுப் பாட்டியை, ஐம்பது வயது அம்மாவை அவளாக அனுமானித்தான். இறுதியில் பாமாவை, பாமாவாக அனுமானித்து அவளை பைக்கில் ஏறும்படி சைகை செய்தான். இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அவனைப் பார்த்து வந்தான். உடனே பாமா பயந்துபோய் அவனை அவசரப்படுத்தினாள். அந்த மீசை இளங்கோவிடம் மணி கேட்க வந்தது, அவர்கள் இருவருக்குமே தெரியாது. எதிரில் ஒருமாதிரி படுகிற அனைவருமே அவர்களுக்கு சரோசாவின் கையாட்களாகத் தோன்றினார்கள். இளங்கோவும் வண்டியை ரவுடி வேகத்தில் ஓட்டினான். யாராவது எதிரே பட்டாக்கத்தியை எடுத்தால் அவர்கள் மீது அப்படியே வண்டியை மோத வேண்டும் என்று முரட்டுத்தனமாக நினைத்தான். உயிர்ப் பயம் அவனைக் கோழையாகவும், வீரனாகவும் மாறி மாறி மாற்றிக் கொண்டிருந்தது.

   

இதற்குள் சிவப்பு சிக்னல் வந்தது. பச்சை சிக்னலுக்காக பின்னால் காத்திருக்க நிதானமற்ற 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.