கொண்டிருந்தார்கள்.
சரோசா, இளங்கோவைப் பார்த்ததும். இறங்கிய படியில் அப்படியே நின்றாள். அவனோடு சேர்ந்து அர்த்தநாரீஸ்வரி போல் நின்றவளைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிரிச்சியில் அவள் மெல்ல மெல்ல சுயஉணர்வு பெற்ற, அவர்கள் பக்கமாய் குதித்தாள். முன்னால் காம்பவுண்ட் சுவரிலிருந்து ஏறிக் குதித்தாளே அப்படிப்பட்ட குதிதான்; ஆனால், எவ்வளவு வித்தியாசம்! சரோசா இளங்கோவைக் காட்டி, அந்தம்மாவிடம் ஏதோ பேசப் போனாள். உணர்ச்சிக் குவியலில் பேச முடியவில்லை. முனியம்மா, அவளுக்கு வாய் கொடுத்தாள் :
'இதுதாம்மா இளங்கோ என்கிற தம்பி. பாவம் இவரையும் ஆபீசுல ‘ஒருமாதிரி' பார்க்கிறாங்க. ஆயிரத்துல ஒரு தம்பி. இன்னிக்குத்தான் இவரு அதிர்ந்து பேசினத பார்த்திருக்கிறேன். கேஷுவல், பர்மனெண்டுன்னு வித்தியாசம் காட்டாதவரு. சாரே! உனிக்கி எப்போ கல்யாணம் ஆச்சு? கடைசியில கேஷுவல்னு நீயும் எனக்கு இன்விடேஷன் கொடுக்கல பாரு."
பாமா, நாணிக்கோணிய போது, முனியம்மா சொன்னதன் தாத்பரியம் புரியாத மனோநிலையில், இளங்கோ “என்ன ஆச்சுது” என்று ருக்குவைப் பார்த்துக் கேட்டான். பிறகு தனது கேள்விக்குரியவள் அந்த அம்மாதான் என்பதுபோல் அவளைப் பார்த்தான். அந்தம்மா, சரோசாவின் கையைப் பின்பக்கமாகப் பற்றி, தன் தோளில் போட்டுக் கொண்டு, அவள் மூக்கைத் தடவி விட்டு, அந்தத் தள்ளாடும் மனிதரை சிறிது நேரம் பார்த்தபடி நின்றவள், இளங்கோவைப் பார்த்து தன்னிலை விளக்கமளித்தாள்:
"நாங்க சமதர்ம மாதர் மன்றத்தைச் சேர்ந்தவங்க. எங்களால ஒரு அண்ணாத்தைக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. ஆனால், சரோசாவை மாதிரி எளியவங்கள மீட்க முடியும். இனிமேல் இவள யாரும் தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கேன். அப்படிச் செய்யறது எங்கள மட்டுமில்ல, எங்க அமைப்பையும் எங்க அமைப்புக்குப் பின்னால இருக்கிறத
இருக்கிறத ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளையும் வம்புக்கு இழுக்கிறதுக்கு சமானமுன்னு போலீசுக்கும் தெரியும், அண்ணாத்தைக்கும் தெரியும்."
சரோசா, முன்பின் அறியாத அந்தப் புதிய பெண்களின் அன்புப் பார்வையில் நெகிழ்ந்தாள்.