(Reading time: 28 - 56 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

வீர : இந்த போக்கிரி என்னை வைவதைக் கேட்டாயா!

   

தோழ : பலே! உங்களுக்கு நல்ல காது. மதுரைக்கு வழி ஏதென்றால் குதிரைக்குச் சுழி நன்றாயில்லை என்பதைப் போல் இருக்கிறதே. இவன் தன்னை மன்னிக்கும்படி அல்லவோ உங்களை நயந்து வேண்டிக் கொள்ளுகிறான்.

   

வீர :அடே !முண்டனம்! உன் தலை எப்பொழுது மொட்டை ஆயிற்று? உன் புருஷன் இறந்து எத்தனை நாளாயிற்று? மொட்டை அடித்துக் கொண்டால்தான் சந்நியாசியோ? அப்பொழுதுதான் சுவர்க்கம் நேரில் தெரியுமோ? முட்டாள் உனக்கு இந்தச் சோலையில் என்ன வேலை? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

   

சந்நி : ஐயா! இந்த நீரோடையில் என்னுடைய காஷாய வஸ்திரத்தை அலசும் பொருட்டு வந்தேன். வேறு எதற்கும் வரவில்லை.

   

வீர: ஓகோ! இந்த இழி தொழிலுக்காகத்தான் இந்தச் சோலை ஏற்பட்டதோ? உன் ஆபாசக் கந்தையைக் கசக்க இதுதான் இடமோ?

   

சந்நி : பிரபு! நான் இப்போது சமீப காலத்திலே தான் சந்நியாசியானேன். தெரியாமல் செய்த பிழையை மன்னித்துக் கொள்ள வேண்டும்.

   

வீர : ஏன் இப்படிச் செய்தாய்? ஏனடா போக்கிரிப் பயலே! நீ பிறக்கும் பொழுதே சந்நியாசியாய்ப் பிறக்கவில்லை? (அடிக்கிறான்)

   

சந்நி : ஹா! ஈசுவரா இதெல்லாம் உனக்கு சம்மதியானால் சரிதான்!

   

தோழன் : (விலக்கி விட்டு) அடே சந்நியாசி! ஓடிப்போ! இங்கே நிற்காதே. (வீரசேனன் உதைக்கிறான்; சந்நியாசி போய் விடுகிறான்)

   

வீர: அடே! இந்தச் சோலைக்கு வரும் போதெல்லாம் எனக்கு அந்த வஸந்தஸேனையின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.