(Reading time: 9 - 17 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

   

இன்னைக்கும் ஒவ்வொரு கார்த்தி மாசமும் திருவிசை நல்லூார்ல கார்த்திகை அமாவாசை தொடங்கி பத்து நாள் தடபுடலா உற்சவம் நடக்கிறது. பாம்பு பஞ்சாங்கத்தை வேனுமானா எடுத்துப் பார். அதில் கார்த்திகை அமாவாசை திருவிசைகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் உற்சவம்னு போட்டிருக்கும்" என்றார்.

   

"இந்தக் கலியுகத்துலகூட இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? நம்ப முடியலையே!" என்றாள் கெளரி.

   

" நடந்திருக்கே சமீபத்துலதான். இருநூறு வருஷம்கூட ஆகல்லே."

   

"அந்த மாதிரியெல்லாம் இப்ப நடக்காது. கலி முத்திப் போச்சு. பேசாம நாளைக்கே இரண்டு பேரும் சிதம்பரத்துக்குக் கிளம்பிப் போய் காதும் காதும் வெச்சாப்பல திவசத்தை முடிச்சுடலாம், வா" என்றாள் கெளரி.

   

"ஒருவேளை இவா சிதம்பரத்துக்கும் வந்து கலகம் பண்ணுவாளோ, என்னவோ..?"

   

"இவா ஜம்பமெல்லாம் அங்கே சாயாது. எங்க பேச்சை யாரும் தட்டமாட்டா" என்றாள் கெளரி.

   

"எப்படிச் சொல்றே?."

   

"ஆயிரம் ஐந்நூறுன்னு ஒவ்வொருத்தருக்கும் கடன் கொடுத்து வைச்சிருக்காரே, இவர். இந்தக் காலத்துல யார் கடன் கொடுப்பா? எல்லாருமே எங்களுக்கு தாட்சண்யப்பட்டவா தான். எங்க பேச்சை யாரும் மீற மாட்டா."

   

"இவாளும் அந்த அளவுக்குப் போவான்னு தோணல்லே. ஏதோ இப்ப ஒரு வேகம்."

   

கமலா குறுக்கிட்டு "எனக்கு ஒண்ணு தோண்றது அத்தை எல்லாரும் காஞ்சிபுரத்துக்கே போயிட்டா என்ன?" என்றாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.