"எதுக்கு?..."
"உங்களுக்குப் பிடிக்கும்னு ரொம்ப ஆசையா தவலை அடை பண்ணி யிருக்கா, உங்க ஆசை மருமாள்!" என்றாள் கமலா.
"நெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே!" என்று சொல்லிக்கொண்டே அத்தை சமையலறையை நோக்கிப் போனாள்.
அத்தை அந்தப் பக்கம் போனதும் "அப்பா ! மூர்த்தி கடுதாசி எழுதியிருக்கான்னு சொன்னயே, அதைக் கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்" என்றாள் கமலா.
"நீ இன்னும் பார்க்கலையா அதை? இங்கதான் ராமாயண புஸ்தகத்துல வச்சிருந்தேன், கொஞ்சம் இரு" என்று கூறி அந்தப் புத்தகத்தை எடுத்துத் தேடினார். கடிதத்தைக் காணவில்லை, இதில்தானே வச்சிருந்தேன்!" என்றார்.
"இந்தா, இதோ இருக்கு" என்று தன் கையிலிருந்த கடிதத்தைக் கனபாடிகளிடம் நீட்டினாள் கமலா.
"இது எப்படி உன் கைக்கு வந்தது !" என்று ஆச்சரியப் பட்டார் கனபாடிகள்.
"கூடத்துல படத்துக்குப் பின்னால் இருந்தது?"
"நான் அங்கே வைக்கலையே?"
"சரி; நீங்களும் வைக்கலே, நானும் வைக்கலே. அப்புறம்..?"
"பாகீரதி வைத்திருப்பாங்கறயா?"
"ஒரு வேளை மூர்த்தி கடுதாசிதானே, படிச்சுப் பார்க்கலாம்னு எடுத்திருக்கலாம்" என்றாள் கமலா.
"மூர்த்தி கடுதாசில இவளுக்கு என்ன அத்தனை அக்கறை என்னைக் கேட்காமே, எனக்குத்