ஆம் இது நடந்தது சுமார் ஐம்பது வருடங்களு;ககு முன்பு..
தஞ்சாவூரில் உள்ள அரசுக் கலைக் கல்லூரி. ராமச்சந்திரமூர்த்தி எம்ஏ பொருளாதாரம் படிக்க சேரும்பொழுது. விசாலம் அங்கே பிஏ ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்;துக் கொண்டு இருந்தார்.
கடைசி ஆண்டு படிக்கும்போது ராமச்சந்திரன் தன் காதலை விசாலத்திடம் சொன்னதுஃ அந்தக் காலகட்டத்தில் காதல் என்றாலே பூதம் பிசாசு போலப் பயப்படுவார்கள் அனைவருமே.
விசாலம் தன் இரண்டாம் ஆண்டு படிப்பில் இருக்கும்போது ஒரு நாள் மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்தது. அனைவரும் வெளியே சென்று கொண்டு இருந்தனர்ஃ விசாலமும் வழக்கமான தன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். பேருந்தும் வந்ததுஃஇவர் ஏறும்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்ததுஃ பேருந்தின் படியில் மேல் பகுதியில் சற்று வெளியே நீட்டிக் கொண்டிருந்த சிறு தகரம் இவரின் தோள்பட்டையைப் பதம் பார்த்து விட்டதுஃ
'ஸ்ஸ் அம்மா" என்ற சிறு அலறலுடன் பேருந்தில் ஏறிவிட்டார்ஃ அவரின் பின்னால் ஏறிய யாரையும் விசா ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. அந்தத் தகரம் விசாலாட்சியின் ஜாக்கேட்டையும் சிறிது கிழித்துவிட்டதுஃ அது இவருக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னால் இருந்து பார்த்தால் பளீரென தெரிந்தது. இவரின் பின்னே சற்றே தள்ளி ஆனால் விசாவின் முதுகை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்தபடியே நின்றிருந்தார் ராமச்சந்திரமூர்த்தி
விசாலாட்சி அவரின் நிறுத்தம் வந்தவுடன் இறங்க. இவரும் பின்னேயே இறங்கினார்.
'ஏங்க" என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் விசா யாரது நம்மள கூப்பிடறது யோசி;த்தபடியே பார்த்தாள்ஃ
தன் கல்லூரியைச்சேர்ந்தவர் என்ற அளவில் ராமச்சந்திரமூர்த்தியை அடையாளம் கண்டு கொண்ட விசா 'என்ன எதுக்காக கூப்பிட்டீங்க" எனக் கேட்டாள்.
'அது வந்து... " சங்கடத்துடன் தவித்தார் ராமச்சந்திரமூர்த்தி
'என்னங்க சீக்கிரம் சொல்லுங்க எனக்கு நேரம் ஆகுது" எனப் பறந்தார் விசா.
"அது உங்க பிளவுஸ் அந்தத் தகரத்தால பின்னாடி கொஞ்சம் கிழிஞ்சிருக்குஃ உங்க முதுகு தெரியுதுஃ பஸ்ல யாரும் பாக்காம நான் உங்க பின்னாடியே நின்னுட்டேன்ஃ ஆனா இப்ப நீங்க உங்க புடவைத் தலப்ப எடுத்து போத்திக்கோங்க " ஒருவாறு கடகடவென சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றே விட்டார்.
'ஐயோ" பேயைப் பார்த்தாற்போல பதறிவிட்டார் விசாஃ
சட்னு தன்னோட புடவை முந்தானையை எடுத்து தன் முதுகைப் போர்த்திக் கொண்டு கடகடவென வீட்டிற்கு நடந்து விட்டார்.
வீட்டில் யாரும் இவரைப் பார்க்கும் முன்னே சட்டென வேறு உடை மாற்றிக் கொண்டு கைகால் சுத்தம் செய்து கொண்டு வந்தவரை யாரும் சந்கேப்படவில்லை.
'இப்படி ஒரு உபகாரம் செஞ்சவருக்கு நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலியேஃஃஃ?" சொல்ல வேண்ழயதை சொல்லிடடு நிக்காம எப்படி ஓடிட்டார்ஃ ரொம்ப நல்ல பிள்ளை தான் போல இருக்கு.. நாளைக்கு பாத்துக் கண்டிப்பாக தேங்க்ஸ் சொல்லணும்" என நினைத்தபடியே அடுத்த நாளை ஆவலாக எதிர்பார்த்தார்.
அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற விசா நேராக எகனாமிக்ஸ் கிளாசுக்கு சென்ற விசா அங்கு ராமச்சந்திரமூர்த்தியைக் காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள்ஃ
அப்பொழுதுதான் கல்லூரிக்குள் நுiர்ந்த அவனைப் பார்த்தவுடன் ஆவலுடன் ஓழ அவர் முன்னால் நின்றாள்ஃ
"என்ன...?"
சாதாரணமாகக் கேட்டவரைப் பார்த்து திகைத்துப் போனாள் என்ன இவருக்கு மறந்து போயிடுச்சா
'அது வந்து நேத்து ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு" என்று விசா கூறியதைக் கேட்டவர்..
'சரி இதைச் சொல்லத்தான் வந்தியா... நீ போ கிளாஸ்க்கு" என்று சொல்லிவிட்டடு நடையைக் கட்டினார். ஆனால் ஒரேயடியாக நடையைக் கட்டவில்லை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.
விசாவின் மனம் இவரையே சுற்றி சுற்றி வந்தாலும் வாய்விட்டு யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஆண்களே, தாங்கள் காதலித்தால் அதைச் சொல்வதற்கு பயப்பட்ட காலக்கட்டம் அது. இதில் விசாலாட்சி எங்கிருந்து தன் காதலைச் சொல்வது? மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொள்வது மட்டுமே அவளால் செய்ய முடிந்தது...
ஆயிற்று விசாவின் இரண்டாம் வருடப் படிப்பு முடிந்ததுஃ லீவும் முடிந்து மூன்றாம் வருடம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வளவு நாட்களும் விசா ராமச்சந்திரனைப் பார்த்தும். கேட்டும் தெரிந்து கொண்ட நல்ல பண்புகள் இவள் மனதை அவர்பால் சாய்த்தது என்றால். ராமச்சந்திரன் கல்லூரிக்கு வரும்போதும் போகும்போதும் அவளின் பொறுமை.