" பூர்ணிமா! உனக்குத் தெரியும், வயசுக்கு வந்த பெண்ணை வீட்டிலே வைச்சுக்கிறது, வயத்திலே நெருப்பை கட்டிவைச்சிருக்காமாதிரி! கலா, விவரமறியாத சின்னப்பொண்ணு! கயிற்றுக்கும் பாம்புக்கும் வித்தியாசம் தெரியாத வயசு! இன்னிக்கி நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை நினைச்சுப்பார்த்தா, குலை நடுங்குது! பிறந்த சிசுவிலிருந்து, தொண்டுகிழவிவரையிலும், இன்னிக்கி, நாட்டிலே, கிராமங்கள், நகரங்கள்னு வித்தியாசமில்லாம, படிச்சவன், படிக்காதவன்னு பாகுபாடு இல்லாம, வீடு, பார்க், காலேஜ், பீச், ஆபீஸ், பள்ளிக்கூடம், கோவில், சாமியார்மடம், ரயில், பஸ், னு ஒரு இடத்தையும் விடாம, ஆண்கள் பொம்பளைபுள்ளைங்களை நாசமாக்கிறதை பார்க்கறோம், கேட்கறோம், படிக்கறோம், போலீஸ், அரசாங்கம், கோர்ட்டு, மதாசாரியர்கள், யாராலேயும் தடுத்து நிறுத்த முடியலே, நாமதாம்மா, ஜாக்கிரதையா இருக்கணும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியா?"
"ஓ.கே.ம்மா!"
படித்துக்கொண்டிருந்த நியூஸ்பேப்பரை மடித்துவைத்துவிட்டு வாசல் வராந்தாவிலிருந்து, உள்ளே வந்த சேகரின் அப்பா, "என்ன, அம்மாவும் பொண்ணும், ரொம்ப நேரமா குசுகுசுன்னு என்காதிலே விழக்கூடாதுன்னு ரொம்ப எச்சரிக்கையா ரகசியம் பேசினாமாதிரியிருக்கு....." என்று விசாரித்தார்.