கடிகாரத்தைப் பார்த்தாள், மணி ஆறு!
அலறிப்புடைத்துக்கொண்டு, பூர்ணிமா எழுந்தாள். பெரியவர்கள் இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
பூர்ணிமா எதிர்கொள்ளவிருக்கிற போருக்கு தயாரானாள்!
சமையலறையில், இரவுச் சாப்பாடு தயாரித்துக்கொண்டே, வாசல்பக்கம் காதுகளை தீட்டிக்கொண்டாள். அவளுக்கு ஒரு யோசனை!
எப்போதும் காலேஜிலிருந்து திரும்பும் கலா வீட்டுக்குள் எங்கிருந்தாலும் அம்மாவைத் தேடி வந்து, அணைத்துக்கொள்வாள். இன்றும், அப்படிச் செய்யும்வரை, பொறுமையாக இருப்பதா, அல்லது அவளை எதிர்நோக்கி வாசலில் காத்திருப்பதா!
யோசித்துவிட்டு, வாசலுமில்லாமல், சமையலறையுமில்லாமல், இடையில், வரவேற்பறையில் டி.வி. பார்த்தவாறே வாசலில் கண்வைத்து, காத்திருந்தாள். நிழலாடியது, இதயத்துடிப்பு திடுமென வெகுவேகமாக இயங்கியது, உடம்பில் பதட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ணிமா உள்ளே செல்வதற்கும் சேகரின் பெற்றோர் வீட்டுக்குள் நுழைவதற்கும் சரியாயிருந்தது!
நிலைமை புரிந்து, இருவரும் ஓடிவந்து, கலாவின் நெற்றியில் கோவிலிலிருந்து கொண்டுவந்த குங்குமத்தை இட்டனர், "அம்மா!தாயே! ஜகதாம்பிகே! எங்க குழந்தைக்கு ஒரு தீங்கும் வராம காப்பாற்றும்மா!" என்று பிரார்த்தித்தனர்!