(Reading time: 23 - 45 minutes)

உள்ளேயிருந்து பூர்ணிமா நீர் கொண்டுவருவதற்கும், கலா கண்விழித்துப் பார்ப்பதற்கும் சரியாயிருந்தது!

இத்தனை களேபரத்தில், தான் சற்று அவசரப்பட்டு ஆத்திரப்பட்டுவிட்டோமோ என்று பூர்ணிமாவின் மனதிலும் தடுமாற்றம் எழுந்தது. கூடவே, சேகர் எப்படி நடந்துகொள்ளப்போகிறானோ, தன்மீது சினமடைந்து என்னென்ன பேசுவானோ, அப்பாவும் அம்மாவும் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று குழம்பித் தவித்தாள்.

சேகர் கலாவையும் பூர்ணிமாவையும் மாறி மாறிப் பார்த்தான், அவன் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது!

பூர்ணிமா, கலாவை நெருங்கி பார்த்து தொட்டாள்.

கையை தட்டிவிட்டதோடு, கலா முகத்தையும் எதிர்ப்புறம் திருப்பிக்கொண்டாள்.

தான் பெற்ற செல்வம் தன்னை வெறுத்துஒதுக்குவதை உணர்ந்த இதயமே வெடித்துவிடும்போல் உணர்ந்தாள். நிலை குலைந்து மூர

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

சேகர் தன் கைகளில் ஒரு அழுத்தத்தை உணர்ந்து படுத்திருந்த பூர்ணிமாவை பார்த்தான்.

கண்கள் குளம் கட்டியிருக்க, அவள் ஒருபுறத்தில் சேகரின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள்! மறுபுறத்தில் கலாவை பாசத்துடன் தடவிக்கொடுத்தாள்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.