புரிஞ்சிப்பாங்க..."
சுசீலா, அண்ணாவை திருத்தவில்லை, அவள் பள்ளியிலும் கல்லூரியிலும் இந்தி கற்றவள். பிராக்ஞா பரீட்சையில் முதலாவதாக தேறியவள்!
அந்த விடுதியும் தங்குவதற்கான அறையும் பகட்டாக இருந்தன.
" மாமா! நீங்க எனக்காக இத்தனை செலவு செய்யவேண்டாமே! உங்க வீட்டிலேயே உங்க குடும்பத்திலேயே ஒருத்தியாக வைத்துக்கொள்ளலாமே!"
" சுசீலா! எங்க வீடு சிறிய வீடு! அது மட்டுமல்ல, உன்னைப் போன்ற வயதுக்கு வந்து கல்யாணமாகாத பெண் முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் தங்குவது, வீணான வம்புப் பேச்சுக்கு இடமாகும்! பணத்தைப் பற்றி கவலைப்படாதே! இங்கு இருக்கப்போவது ஒருசில நாட்களுக்குத்தானே! உன்னை இன்றே ஒரு நல்ல கம்பெனியில் சேர்த்துவிட ஏற்பாடு செய்கிறேன். நான் அவர்களைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்வரை நீ ஓய்வு எடுத்துக்கொள்! சர்டிபிகேட்களை ரெடிபண்ணி வைச்சுக்கோ!"
வெளியே போனவர், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார்.
" சுசீலா! உனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது! மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் உனக்கு வேலைதர அந்தக் கம்பெனி சம்மதித்துவிட்டது.
ஆனால், முதலில் உனக்கு சில மெடிகல் டெஸ்ட் பண்ணி, ரிபோர்ட்டுடன் வரச்சொல்லியிருக்காங்க! கிளம்பு! முதலில் க்ளினிக் போய் டெஸ்ட் எல்லாத்தையும் முடித்து ரிபோர்ட் வாங்கி வருவோம்!"
அண்ணா க்ளினிக்கில் நுழையும்போதே, கெஸ்ட் ஹவுஸ் போலவே இங்கேயும் அவருக்கு உபசரிப்பும் வரவேற்பும் தடபுடலாக இருந்தது.
சீஃப் நர்ஸ் ஓடி வந்து, அண்ணாவுக்கு நமஸ்தே சொன்னாள்.
" மேரி! இந்தப் பெண் பெயர் சுசீலா! தமிழ்ப் பெண். வழக்கம்போல, எல்லா டெஸ்ட்டும் சீக்கிரமா எடுத்து ரிபோர்ட் கொடுங்க! நாளைக்கே வேலையிலே சேரணும். சரியா?"
" அவசரப்படாதீங்க, சார்! உங்களுக்கு தெரியாதா, முதல்லே இப்ப அவசரமா தேவைப்படறது, ஆதரைசேஷன் கமிட்டி ஒப்புதல்!ஆணா, பெண்ணா? எந்த மொழி பேசறவங்க? எந்த மதம்? இதெல்லாம் செக் பண்ணிட்டு வாங்க! அதற்குள்ளே, நான் பெண்ணை தயார் பண்றேன்...."
இந்தியில் இருவரும் பேசிக்கொண்டது, சுசீலாவுக்கு புரிந்துவிட்டது!
ஏதோ சூது நடக்கிறது என்று தெரிந்ததும், மனசுக்குள் கிலி பிறந்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல், அப்பாவியாக நின்றுகொண்டிருந்தாள்.
அண்ணா, மேரி சொன்னதைக் கேட்டதும், " ஆமாம், அவசரத்திலே மறந்து போச்சு! இதோ