" சுசீலா! உனக்கு அந்த வேலை வேண்டாம். மாதம் முழுவதும் வேலை செய்தபிறகு, ஐம்பதாயிரம் தருவாங்க! அதுக்குப் பதிலா, உடனடியா உனக்கு லட்ச கணக்கிலே ரூபாய் கிடைக்க ஒரு திட்டத்தோட வந்திருக்கேன். ஒரே நாளிலே அந்தப் பணம் உனக்கு கிடைச்சிடும், அதை எடுத்துக்கிட்டு நீ ஊருக்கு திரும்பிப் போய் அம்மாவுடன் வாழலாம். என்ன சொல்றே?"
" மாமா! நீங்க எங்களுக்கு நன்மை செய்ய, முடிவு கட்டிட்டீங்க! விவரத்தை சொல்லுங்க!"
" ஒரு நோயாளி ரெண்டு கிட்னியும் பழுதாகி உயிர் பிழைக்கிறதே கஷ்டமான நிலையிலே இருக்கார், அவசரமா அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் பிழைப்பார். பெரிய கோடீஸ்வரன். எத்தனை லட்சம் வேண்டுமானாலும், கறக்கலாம்.
கடவுள் மனிதனுக்கு ரெண்டு கிட்னி தந்திருக்கிறதே, இந்தமாதிரி இக்கட்டிலே, ஒரு கிட்னி தானம் பண்ணுவதற்குத்தான்! நாம் வாழ ஒரு கிட்னி போதும்.
நீ சம்மதித்தால், உடனே இரத்தப் பரிசோதனை செய்வாங்க! உன் குரூப்பும் நோயாளியின் குரூப்பும் ஒத்துப்போச்சுன்னா, உடனடியா நாற்பது லட்ச ரூபாய் பணத்தை வாங்கித்தரேன்.
இதிலே ஒரு சின்ன சிக்கல்! உறுப்பு தானம் செய்வதிலே, நிறைய மோசடி நடக்குதுன்னு, அரசாங்கத்திலே, சில விதிகள் போட்டிருக்காங்க! உன்னை ஒரு இன்டர்வியூ போர்ட் விசாரிப்பாங்க! அவங்க சிபாரிசிலே, ஆதரைசேஷன் கமிட்டி அப்ரூவ் பண்ணுவாங்க!
சுசீலா! உன் ரத்தம் எந்த குரூப்னு தெரியுமா?"
" ஓ பாசிடிவ்!"
அண்ணா துள்ளிக் குதித்தார்.
" நோயாளிக்கும் அதே குரூப்தான்! முதல் கட்டம் வெற்றி! சரி, அடுத்த சிக்கல் என்னன்னா, தானம் செய்கிறவங்க, நோயாளியின் நெருங்கின உறவுக்காரங்களா இருக்கணுமாம்!
நோயாளி ஒரு முஸ்லீம்! அவருக்கு உறவுன்னு சொல்லிக்கணும்னா, நீயும் இன்னிக்கி ஒருநாள் மதம் மாறணும்! சுசீலாங்கிற உன் பெயரை 'மசீரா'ன்னு மாற்றிடுவோம்! நீ தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த முஸ்லீம், அவரும் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து துபாய் சென்றவர்! அதனாலே, உருது தெரியாதுன்னு சமாளிக்கலாம்.
சுசீலா! இன்டர்வியூ போர்டிலே உள்ளவங்க, ஆதரைசேஷன் கமிட்டியிலே உள்ளவங்க எல்லாரும் எனக்கு தெரிந்தவங்க! நான் பார்த்துக்கிறேன்.
முதல்லே உன்னை டாக்டரிடம் அழைத்துப் போகிறேன், பத்து நிமிஷத்திலே! அதுவரையிலும் நீ இங்கே உட்கார்ந்திரு! யார் எது கேட்டாலும் ஒண்ணும் சொல்லாதே!"
இதற்குமேல் இங்கிருந்தால், 'அண்ணா' தன் கிட்னியை அறுவை சிகிச்சை செய்யாமல் தன்